எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது, அவருக்கு அன்றைய திமுக அரசு பல பிரச்சனை செய்து செய்த மாதிரியே தற்போது விஜய்க்கும் சின்ன சின்ன பிரச்சனைகளை செய்து வருகிறது என்றும், விஜய்க்கு பிரச்சனை கொடுத்தால் அவர் இன்னும் வளர்வாரே தவிர, அவருக்கு மக்கள் ஆதரவு குறையாது என்றும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு இருக்கும் மக்கள் ஆதரவு, அவரே எதிர்பாராதது என்றும், அதிமுகவுடன் மட்டும் அவர் கூட்டணி வைத்திருந்தால் நிச்சயம் திமுகவை வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும், ஆனால் அது நிகழாமல் போனது துரதிஷ்டமே என்றும் கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் அளித்தார்.
மேலும், தற்போது விஜய்க்கு தொடர்ந்து திமுக அரசு பல்வேறு அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது என்றும், காவல்துறை மூலம் அவருக்கு தொடர்ந்து பிரச்சனை கொடுத்துக் கொண்டிருந்தால், கண்டிப்பாக அவர் இதைவிட இன்னும் வளர்வாரே தவிர தளர மாட்டார் என்றும், இந்த சின்ன விஷயம் கூட புரியாமல் திமுக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எம்ஜிஆருக்கு சின்ன சின்ன விஷயங்களில் திமுக அரசு சிக்கல் கொடுத்தது, அவருடைய உலகம் சுற்றும் வாலிபன் படத்தை கூட ரிலீஸ் செய்ய விடாமல் பல தொந்தரவுகள் செய்தது. ஆனால், அவர் உயிரோடு இருக்கும் வரை கருணாநிதியை முதல்வராக விடவில்லை.
அதேபோன்றுதான், தற்போது விஜய்க்கும் திமுக அரசு சிக்கல் கொடுத்து கொண்டிருப்பதாகவும், விஜய் ஒருமுறை ஆட்சியைப் பிடித்துவிட்டால் அதன் பிறகு ஜென்மத்துக்கும் திமுகவால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றும் அந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில், விஜய் தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத தலைவராக மாறிவிட்டார் என்றும், அவருடைய வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.