பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது தற்கொலைப்படை குண்டுடன் போக தயாராக உள்ளேன் என கன்னட அமைச்சர் சமீர் அக்மத் கான் பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா–பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக மாநில அமைச்சர் பி.ஏஸ். சமீர் அக்மத் கான் கொடுத்த ஒரு அதிர்ச்சி பேட்டி வைரலாகியுள்ளது.
“பாகிஸ்தான் எப்போதுமே இந்தியாவின் எதிரியாக தான் இருந்து வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுமதித்தால், நான் பாகிஸ்தானுக்கு போய்விட்டு வரமாட்டேன்… போர் செய்யவே போகிறேன்!” என அவர் கூறினார்.
“என்னிடம் தற்கொலை குண்டு தாருங்கள், உடலில் கட்டிக்கொண்டு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவேன்! என அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ‘நாங்கள் இந்தியர்கள், ஹிந்துஸ்தானிகள். பாகிஸ்தான் எப்போதும் எங்களுடன் எதிர்மறையாக இருந்தது. பாகிஸ்தானுக்கு எப்போதுமே நெருக்கம் இல்லை. மோடியும், அமித்ஷாவும் என் மீது நம்பிக்கை வைத்து தற்கொலை குண்டு கொடுத்தால், அதை என் உடலில் கட்டிக்கொண்டு பாகிஸ்தான் சென்று பாகிஸ்தானை அழித்து விடுகிறேன். என்று கூறியுள்ளார்.