அர்ச்சனைத்தட்டுல தவறாம இடம்பெறும் வெத்தலைப்பாக்கு… அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

முன்னோர்கள் செய்ற ஒவ்வொரு செயலிலும் ஆழமான அர்த்தம் இருக்கும். அந்த வகையில் அதன் அர்த்தம் என்னவா இருக்கும்னு பார்த்தா ஆச்சரியமா இருக்கும். இதுல இவ்ளோ விஷயம் இருக்குதான்னு நாம பார்ப்போம். கோவிலுக்குப் போனா சாமி…

முன்னோர்கள் செய்ற ஒவ்வொரு செயலிலும் ஆழமான அர்த்தம் இருக்கும். அந்த வகையில் அதன் அர்த்தம் என்னவா இருக்கும்னு பார்த்தா ஆச்சரியமா இருக்கும். இதுல இவ்ளோ விஷயம் இருக்குதான்னு நாம பார்ப்போம். கோவிலுக்குப் போனா சாமி கும்பிடுவோம்.

பலர் அர்ச்சனை செய்வாங்க. அப்போ தேங்காய், பழம், சூடம், பத்தி, பன்னீர், வெத்தலைப்பாக்கு என எல்லாம் அர்ச்சனைத் தட்டுல இருக்கும். இவற்றில் தேங்காய், 2 வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு மிகவும் முக்கியம். இந்த வெத்தலைப்பாக்கு வைக்கிறதுக்கு என்ன காரணம்னு பார்க்கலாமா…

வெற்றிலையும், பாக்கும் மகாலட்சுமியின் சொரூபம். இதுல எல்லா வித சக்திகளும் அடங்கியுள்ளது. மகாலட்சுமி, பார்வதி, சரஸ்வதி என்னும் 3 சக்திகளும் இணைந்துள்ளனர்;. அது பாக்கோடு சேர்க்கும்போது மங்கலகரமாக மாறுகிறது. மகாலட்சுமி நம் கூடவே இருக்கணும்கறதால வெற்றிலைக்குப் பேரே வெற்றியைத் தரும் இலை என்னும் பொருள்படுகிறது.

நம் வாழ்க்கையில் எல்லா வெற்றியும் அமையணும்கறதுக்காகத் தான் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய் என எல்லாவற்றையும் அர்ச்சனையில் பயன்படுத்துகிறோம். இது வெறும் அர்ச்சனைக்கு மட்டுமல்ல. ஆத்மாவின் சொரூபமாக சொல்லப்பட்டது.

தேங்காய் அறிவின் வெளிப்பாடு, வாழைப்பழம் பிறவி, வினையின் வெளிப்பாடு, வெற்றிலைப்பாக்கு மங்களகரத்தின் வெளிப்பாடாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நாம் ஏன் இதெல்லாம் வைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்வதில்லை. இவை வெறும் பொருள்கள் அல்ல. தாத்பரியங்களைப் போதிக்கும் ஞானதத்துவப் பொருள்களாக நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள்.