நேற்று அதிகாலை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை அதிரடியாக தாக்கியது. இதில், தீவிரவாத குழுக்களில் பெரும்பாலோர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் கூடாரம் காலி ஆகிவிட்டதாகவும், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தாக்குதல் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா, ரஷ்யா உட்பட அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்து வரவேண்டும், பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஒரே நாடாக சீனா மட்டுமே இருந்துள்ளது. பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து ஏராளமான ஏவுகணைகளை வாங்கியது என்பதும், இதற்காக கோடி கணக்கில் பணம் செலவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், நேற்றைய இந்தியாவின் தாக்குதலின் போது பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் அனைத்தும் செயல் இழந்ததாகவும், இந்தியாவின் ராணுவ சக்தி முன்னிலையில் பாகிஸ்தானில் சீன பொருட்கள் முழுமையாக தோல்வி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், சீனாவில் இருந்து வாங்கிய ரேடார்கள் கூட ஒத்துழைக்கவில்லை என்றும், முழுக்க முழுக்க பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ஆயுதப் பொருட்கள் செயல் இழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் தனது ராணுவ தேவைக்கு 95% க்கும் மேல் சீனாவையே சார்ந்து இருந்தது. சீனாவில் இருந்து ஆயுதப் பொருட்களை வாங்க மிக அதிகமான தொகை செலவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், பிரதமர் மோடியின் ஆட்சி கீழ் இந்தியாவின் முன்னணி நவீன தொழில்நுட்பத்திற்கு முன்பாக சீனாவின் ஏவுகணைகள் எதுவுமே செயல்படவில்லை.
நேற்று வெளியான தகவலின் படி, சீனாவின் 9 ஏவுகணைகள் தோல்வி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. ரஷ்யா உட்பட முன்னணி நாடுகளின் தொழில்நுட்பத்தில் இந்தியா ஆயுதங்களை வாங்கிய நிலையில், சீனாவை மட்டுமே நம்பி இருந்த பாகிஸ்தானுக்கு இன்னொரு மிகப்பெரிய தோல்வியும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.