இறந்தவர்கள் அனைவரும் மீண்டும் பிறப்பார்கள். அவரவர் பாவ, புண்ணிய பலன்களுக்கு ஏற்ப இது வரும் என்கிறார்களே. மறுபிறவி உண்மையா? வாங்க பார்க்கலாம்.
இந்த கேள்விக்கு விடைகூறும் முன்னர். குண்டலினி சக்தி பற்றி சிறிது தெரிந்துகொள்வோம். குண்டலினி சக்திக்கு ஏழு மையங்கள் உள்ளன. அதில் கீழ் உள்ளது மூலாதாரம், மேல் உள்ளது சகஸ்ராரம். சகஸ்ராரத்திற்கு உயிர் சென்றால் பிரம்மத்தில் (கடவுளில்) கலந்துவிடும்.அப்போது உடல் இயங்காமல் நின்றுவிடும், முச்சு நின்றுவிடும். மனம் நின்றுவிடும்.
..
இதற்கு நேர் மாறான ஒரு நிலை உள்ளது.அதுதான் மூலாதாரம் இந்த இடத்திற்கு உயிர் சென்றால்கூட மூச்சுநின்றுவிடும், மனம்நின்றுவிடும்.ஒவ்வொரு உயிருக்கும் மூலாதாரம் என்ற ஒரு மையம் இருக்கிறது.திடீரென்று ஏற்படும் அதிர்ச்சியின் காரணமாக உயிர் மூலாதாரத்தில் நிலைகொள்ளும். அப்போது உடல் உணர்வற்றநிலைக்கு சென்றுவிடும். மனிதன் இறந்தவனாகி விடுகிறான்.இதயம் நின்றுவிடுகிறது. மூச்சும் நின்று விடுகிறது.
..
மூலாதாரத்தில் உயிர் நிலைகொண்டால் மனிதன் உயிர் அதற்குள்ளே அடங்கி விடுகிறது. சகஸ்ராரத்திற்கும்,மூலாதாரத்திற்கும் உள்ள வேறுபாடு என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. சகஸ்ராரத்தில் மனிதன் கடவுளாகிறான்.மூலாதாரத்தில் மனிதன் எதுவுமற்ற சூன்யமாகிறான்.அந்த நிலையில் தொடர்ந்து இருந்தால் உடலைவிட்டு சூட்சும உடல் பிரியாது.
மனம் இயங்கிக் கொண்டிருந்தால்தான் சூட்சும உடல் தனியாக பிரியும். மூலாதாரத்தில் உயிர் ஒடுங்கிவிட்டால் சூட்சும உடலும் அதற்குள் ஒடுங்கிவிடும். இந்த நிலையில் மனிதன் தூக்கத்தில் இருக்கும்போது எந்த நிலையில் இருப்பானோ அதேநிலைக்கு சென்றுவிடுவான். எதுவும் தெரியாது.
..
ஒவ்வொரு நாளும் நாம் தூங்குகிறோமே அப்போது மூலாதாரத்திற்கு செல்கிறோமா என்று கேட்டால், முற்றிலுமாக அங்கு செல்வதில்லை. உடல் உறுப்புகளை இயக்குவதற்காக மூளை இயங்கிக்கொண்டே இருக்கிறது.
எனவே முழுவதும் மூலாதாரத்திற்குள் உயிர் அடங்காது.ஆனால் அதன் அருகில் உள்ள மையத்தில் அது இருக்கும்.
..
திடீரென்று ஏற்படும் அதிர்ச்சி,அல்லது வேறுபல காரணங்களால் உயிர் மூலாதாரத்தில் சென்று ஒடுங்கிவிட்டால் பின்னர் எல்லாம் முடிந்துவிடும். மறுபிறப்பு ஏற்படாது. இறக்கும்போது மூலாதாரத்திற்குள் யாருடைய உயிர் சென்று ஒடுங்குகிறதோ அந்த மனிதன் மீண்டும் பிறப்பதில்லை.