இந்தியாவில் 5Gயே முழுமையடையவில்லை.. சீனாவில் அதற்குள் 10G.. 2 வினாடிகளில் திரைப்படம் டவுன்லோடு..!

  இந்தியாவில் 5G அறிமுகப்படுத்தப்பட்டாலும் இன்னும் நாடு முழுவதும் இந்த நெட்வொர்க் வசதி கிடைக்கவில்லை என்பதும் சில முக்கிய நகரங்களில் மட்டும் தான் இந்த வசதி தற்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்தது. இன்னும்…

10g

 

இந்தியாவில் 5G அறிமுகப்படுத்தப்பட்டாலும் இன்னும் நாடு முழுவதும் இந்த நெட்வொர்க் வசதி கிடைக்கவில்லை என்பதும் சில முக்கிய நகரங்களில் மட்டும் தான் இந்த வசதி தற்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்தது. இன்னும் கிராமங்களில் 3G வசதி தான் இருந்து கொண்டிருக்கும் நிலையில் சீனாவில் தற்போது 10Gஅறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹெபே மாகாணம் சுனான் கவுண்டியில், ஹுவாய் மற்றும் சீனா யூனிகோம் இணைந்து, நாடு முழுவதும் முதல்முறையாக 10G பிராட்பேண்ட் இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன. இது, 50G PON (Passive Optical Network) எனும் சமீபத்திய நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய இணைப்பு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த அம்சத்தால் 2.30 மணி நேர திரைப்படத்தை 2 நொடிகளில் டவுன்லோடு செய்துவிடலாம் என கூறப்படுகிறது.

ஒரு வீட்டு இணைப்பில், இந்த 10G பிராட்பேண்ட் வசதியை பயன்படுத்தி, 9,834 Mbps டவுன்லோட் வேகமும், 1,008 Mbps அப்லோட் வேகமும் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் நெட்வொர்க் லேட்டன்சி வெறும் 3 மில்லிசெக்கண்டுகள் மட்டுமே. இந்த சிறப்பான செயல்திறன், எதிர்கால இணைய பயன்பாடுகளில் உலக அளவில் fiber நெட்வொர்க்குகளின் தாக்கத்தை சுட்டிக்காட்டுகிறது.

இந்த சாதனையின் பின்னணி, நவீனமயமாக்கப்பட்ட fiber வடிவ நெட்வொர்க் வடிவமைப்பே காரணம். 50G PON தொழில்நுட்பம், முன்னைய “கிகாபிட்” காலத்திலிருந்து “மல்டி-கிகாபிட்” பரிணாமத்திற்கு அடித்தளம் அமைக்கிறது. இது, cloud gaming, 8K ஸ்ட்ரீமிங், ஏஐ-ஆதாரபூர்வமான ஸ்மார்ட் ஹோம்கள், தொலை நர்சிங் உள்ளிட்ட உயர் வீத உட்செலுத்தல் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சி, சீனாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. உலகளாவிய இணைய வளர்ச்சியில் முன்னிலை வகிக்க சீனா தயாராகி வருகிறது. 10G நெட்வொர்க் மூலம்,  ஸ்மார்ட் நகரங்கள்,  4.0 தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்கு தேவையான அடித்தளம் உருவாகிறது.

சீனா 10G அம்சத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கையில், இந்தியா 6G குறிக்கோளை நோக்கி பயணிக்கிறது. 2023 மார்ச் 23 அன்று,  பிரதமர் மோடி வழங்கிய பாரத் 6G திசைகாட்டும் திட்டம், 2030 க்குள் இந்தியாவை 6G தொழில்நுட்பத்தில் உலகத் தலைமுறையாக மாற்றும் நோக்குடன் உருவாக்கப்பட்டது.

இந்த நோக்கை செயல்படுத்த Bharat 6G Alliance எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 4400–4800 MHz மற்றும் 7125–8400 MHz போன்ற முக்கிய அம்சத்தில் 6G இல் பயன்படுத்துவதற்காக சர்வதேச ஆய்வில் உள்ளன. 2027 ஆம் ஆண்டில் நடைபெறும் World Radiocommunication Conference இல் இறுதித் தீர்மானங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தற்போது பிராட்பேண்ட் வேகத்தில் இந்தியா சில படிகள் பின்தங்கியிருக்கலாம். ஆனால் 6G குறித்த இந்தியாவின் தொலைநோக்கு திட்டம், உலக டிஜிட்டல் போட்டியில் இந்தியா பின்னடைவை எதிர்கொள்ளாது என்பதை உறுதி செய்கிறது.