சித்ரா பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா? சித்தர்கள் சமாதிக்குச் சென்றால் இவ்ளோ சக்தியா?

நாளை (12.5.2025) சித்ரா பௌர்ணமி. மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாள். இந்த நன்னாளில் சித்தர்கள், ரிஷிகள், மகான்கள் வாழ்ந்த புனித மலைகள், ஜீவ சமாதிகளுக்கு…

நாளை (12.5.2025) சித்ரா பௌர்ணமி. மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாள். இந்த நன்னாளில் சித்தர்கள், ரிஷிகள், மகான்கள் வாழ்ந்த புனித மலைகள், ஜீவ சமாதிகளுக்கு செல்வதால் என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போமா…

நம்முடைய மரபில் ஆதியில் இந்த நாள் “சித்தர் பௌர்ணமி” என்றே அழைக்கப்பட்டது. பின்னாளிலே தான் மருவி சித்ரா பௌர்ணமியானது என காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் அடிக்கடி கூறுவார். இந்த சித்ரா பௌர்ணமி அன்றுதான் இறையருளை வழங்குவதற்காக சித்தர்கள் பல்வேறு வடிவங்கள் எடுத்து பூமிக்கு வருவதாக கோரக்கர் தனது “மலை வாடகம்” நூலில் கூறுகிறார். ஒவ்வொரு சித்ரா பௌர்ணமியிலும் இன்று வரை இலங்கையில் சித்தர்களின் ஆதி இருப்பிடம் வேலொடும்

மலையில் இரவு முழுவதும் பதினெண் சித்தர்கள் சன்னிதியில் இன்றுவரை மாபெரும் சித்தர்கள் வழிபாடு, அபூர்வ காயகல்ப மூலிகைகளினால் அற்புதமான வேள்விகள் நடைபெறுகின்றன.

நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும். நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு சித்ரா பௌர்ணமியில் சக்தி அதிகரிக்கும்.

பௌர்ணமியன்று தெய்வ அருள், மூலிகைக் காற்றால் உடல்நலம், நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது. அன்றைய தினம் புனித மலைகளுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தப்படி அமைதியாக வந்தால் பலன் இரட்டிப்பாகும்.
குறிப்பாக சித்தர்களின் அருளை நாம் தியானத்தால் அல்லது ஆழ்ந்த தவத்தால் பெற முடியும். சித்ரா பௌர்ணமி வழிபாட்டின் மிக முக்கிய அம்சமாக சித்தர்களின் அருளை பெறுவது முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

நமக்கு மட்டுமல்ல சித்தர்களுக்கும் சித்ரா பௌர்ணமி முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். பொதுவாக சித்ரா பௌர்ணமி தினத்தன்று பூமியில் இருந்து ஒருவித உப்பு கிளம்பும். அந்த உப்புக்கு பூமிநாதன் (பூநீறு) என்று பெயர். இந்த உப்பு அதிக சக்தி தரக்கூடியதாகும். இதை சித்தர்கள்தான் கண்டுபிடித்து உலகத்துக்கு தெரிவித்தனர்.

சித்ரா பௌர்ணமி தினத்தன்று அந்த உப்பின் சக்தியை பெறுவதற்காகவே சித்தர்கள் பல இடங்களில் தோன்றுவது உண்டு.