பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் தீவிரவாத முகாம்களை இந்தியா தாக்கிய ஒரு நாளுக்கு பிறகு, அமெரிக்க நிறுவனமான மேக்சார் டெக்னாலஜிஸ் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களில் இரண்டு முக்கிய தீவிரவாத முகாம்களுக்கு ஏற்பட்ட பெரும் சேதங்கள் காட்டப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் படங்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம், முரிட்கே பகுதியில் உள்ள லஷ்கர்-எ-தாய்பா அமைப்பின் முகாமும், பாகிஸ்தானின் பஹாவல்பூர் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-மொஹமதின் முகாமும் சேதம் அடைந்ததை உறுதி செய்துள்ளன.
இந்திய ராணுவம் பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-மொஹமத் அமைப்பின் முக்கிய முகாமான மார்க்கஸ் அப்துன் அல்லாஹ் என்ற இடத்தை இலக்காக எடுத்தது. 2015 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த முகாம் ஜெய்ஷ்-இ-மொஹமத் அமைப்பின் முக்கிய பயிற்சி மையமாகும் மற்றும் அதன் இயக்கத்தின் தலைமையகம் ஆகும். இந்த முகாம் புல்வாமா தாக்குதலின் திட்டமிடலில் தொடர்புடையது.
முரிட்கே பகுதியில் உள்ள லஷ்கர்-எ-தாய்பாவின் மார்க்கஸ்தாய்பா முகாமும் தாக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த முகாம், லஷ்கர்-எ-தாய்பா அமைப்பின் முக்கிய பயிற்சி மையமாக செயல்படுகிறது. இந்த முகாமில் ஆண்டுதோறும் சுமார் 1000 மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. ஆனால், பாகிஸ்தானின் ஆதரவு அளிக்கும் ஒரே நாடு சீனா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முன்னணி நவீன ஆயுதங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், பாகிஸ்தானுக்கு சீனாவே பரபரப்பான ஆயுத ஆதாரமாக இருந்து வந்தாலும், இந்த நடவடிக்கைகள் இவர்களுக்கு பெரும் தோல்வி கொடுத்துள்ளது. இந்த தாக்குதலால் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் கிட்டத்தட்ட முழுமையாக அழிந்துவிட்டதாகவும், இனி தீவிரவாதம் தலைதூக்க முடியாத அளவுக்கு இந்தியாவின் தாக்குதல் இருந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இனிமேலாவது பாகிஸ்தான் வளர்ச்சி பாதைக்கு செல்ல ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக நாடுகள் கேட்டு கொள்கின்றன.