இந்தியா ஆன்மீக பூமி.. அழிக்க நினைத்தால் நாம் தாம் அழிந்துவிடுவோம்: அரசுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கொந்தளிப்பு..!

இந்தியா ஒரு ஆன்மீக பூமி என்றும் இந்தியாவை அழிக்க முயன்றால், நாம்தான் அழிந்து விடுவோம் என்றும் நாம் முன்னேற வேண்டும் என்றால் பிற நாட்டை அழிப்பதை விட்டுவிட்டு, நம்முடைய நாட்டை எப்படி முன்னேற்ற வேண்டும்…

pak people

இந்தியா ஒரு ஆன்மீக பூமி என்றும் இந்தியாவை அழிக்க முயன்றால், நாம்தான் அழிந்து விடுவோம் என்றும் நாம் முன்னேற வேண்டும் என்றால் பிற நாட்டை அழிப்பதை விட்டுவிட்டு, நம்முடைய நாட்டை எப்படி முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ வேண்டும் என்றும் பாகிஸ்தானில் உள்ள நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததிலிருந்தே, பாகிஸ்தான் அரசியல்வாதிகள் இந்தியாவை ஒரு எதிரி நாடாகவே கருதி வருகின்றனர். இந்தியா–பாகிஸ்தான் இருமுறை போர் நடைபெற்ற போதிலும், இரண்டு போரிலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்து, பொருளாதார ரீதியில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது.

ஆனால் இந்தியா, படிப்படியாக தொழில்நுட்ப வளர்ச்சியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் முன்னேறியது. தற்போது பொருளாதார ரீதியாக உலகில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்தியா, இன்னும் சில ஆண்டுகளில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிவிடும் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில், பாகிஸ்தான் அரசியல்வாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்த வேண்டும், இந்தியாவை அழிக்க வேண்டும் என்பதையே முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளனர். உள்நாட்டு வளர்ச்சி, மக்களின் வேலை வாய்ப்புகள், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் எவ்வித கவனமும் செலுத்தாமல், தீவிரவாத இயக்கங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவழித்து, காஷ்மீரை கைப்பற்றும் நோக்கத்திலேயே இருந்தனர்.

“கெடுவான் கேடு நினைப்பான்” என்பதற்கேற்ப, பாகிஸ்தானின் எந்த ஒரு தீவிரவாத திட்டமும் இந்தியாவில் பெரிய அளவில் செயல்பட முடியவில்லை. ஆனால் பாகிஸ்தான் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. அரசு சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உலக வங்கியின் கடன்கள் மூலமாகவே பாகிஸ்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் மக்கள் தற்போது கொந்தளிக்கின்றனர். “இந்தியா ஒரு ஆன்மீக பூமி, அதை அழிக்க நினைத்தால் நாம்தான் அழிந்து போவோம். மற்றொரு நாட்டை அழிப்பதில் செலுத்தும் கவனத்தை சொந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு செலுத்துங்கள். அப்போதுதான் நம் நாடும் வளர்ச்சி அடையும், மக்களும் முன்னேறுவார்கள்” என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இனிமேலாவது பாகிஸ்தான் அரசியல்வாதிகள், இந்தியாவுடன் மோதல் போக்கை கைவிட்டு, சொந்த நாட்டை முன்னேற்றுவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

பாகிஸ்தான் அரசியல்வாதிகள் இந்தியாவுக்கு எதிராக இருந்தாலும், பாகிஸ்தான் மக்களில் பலர் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதை இதன் மூலம் உணர முடிகிறது.