இன்று அதிகாலை, பாகிஸ்தான் அமிர்தசரஸில் உள்ள குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து அனுப்பிய பல கமிகாஸி ட்ரோன்கள் இந்திய ராணுவத்தின் வான்வழி பாதுகாப்பு பிரிவால் துல்லியமாக கண்டறிந்து நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.
அதிகாலை 5 மணியளவில், பைகர் YIHA III எனும் ட்ரோன்கள் இந்திய எல்லையை கடந்து நுழைந்தன. மிகப்பெரிய மக்கள் தொகை வசிக்கும் பகுதிகளை நோக்கி வந்த இவை, AAD (Air Defence) அமைப்பால் சில விநாடிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.
எல்லைக்கு அருகே நிலைநிறுத்தப்பட்ட வான்வழி துப்பாக்கிகள் மூலம் அனைத்தும் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் எவருக்கும் காயமோ, பொதுமக்கள் பகுதியில் ஆபத்து எதுவும் இல்லையென அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
மேலும் ஸ்ரீநகர், அவன்டிபூர், உதம்பூர் வான்படைத் தளங்களில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை பாகிஸ்தான் குறிவைத்ததாக கர்நல் சொபியா குரேஷி தெரிவித்தார். இது பாகிஸ்தானின் பொறுப்பற்ற செயல்களை காட்டுகிறது என்றும் கூறினார்.
பாகிஸ்தான் ஊடகப் பேச்சாளர்கள் இந்திய மக்களின் அரசை கண்டிக்கும் உரையால் மகிழ்கிறார்கள். ஆனால் இது ஒரு ஜனநாயகத்தின் இயல்பு. பாகிஸ்தானில் இது நடப்பது இல்லாததால்தான் அதில் ஆச்சரியப்படுகிறார்கள்,” என்றார்.
26 இடங்களில் ட்ரோன்கள், ஏவுகணைகள், மற்றும் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கர்நல் குரேஷி கூறினார். உதம்பூர், புஜ், பாதங்கோட், பதிந்தா ஆகிய வான்படைத் தளங்களில் பொருட்கள் மற்றும் வீரர்கள் பாதிக்கப்பட்டனர்.
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடி இந்தியா சில முக்கிய பாகிஸ்தான் விமானத் தளங்களை அழித்துள்ளது. லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டன,.
பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பகுதியில் 15 ட்ரோன்கள் கண்டறியப்பட்டதால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் போரில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப், நாட்டின் அணுகுண்டு ஒழுங்கமைப்பு குழுவான NCA கூட்டத்தை அழைத்துள்ளார். இதனால் இந்தியா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படுமா என்ற அச்சம் தோன்றியுள்ளது. ஆனால் அதை இந்தியா லெப்ட் ஹேண்டில் சமாளித்துவிடும் என்றும் நம்பப்படுகிறது.