பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்தி வந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலால் அதிர்ந்துபோன பாகிஸ்தான், இரவுநேரங்களில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இந்திய ராணுவம் இதற்கு சமமான பதிலடி அளித்து வருகிறது.
நேற்று இரவு, ஜம்மு உள்ளிட்ட பல இடங்களில் ட்ரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. அதற்கு பதிலாக இந்தியா பதிலடி தாக்குதலை நடத்தியது.
இந்தியா, பாகிஸ்தானின் மூன்று முக்கிய ராணுவ விமான தளங்களை தாக்கியுள்ளது. அவை:
1. நூர் கான் (ராவல்பிண்டி)
2. மூரிட் (சக்க்வால்)
3. ரஃபிகி (ஷோர்கோட், ஜாங் மாவட்டம்)
இதற்கு பிறகு, பாகிஸ்தான் தனது வான்வழியை தற்காலிகமாக மூடிவிட்டது.
நேற்றும், இன்று காலையும் இந்திய எல்லையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்..
பஞ்சாபின் பத்தன்கோட்டில் இன்று காலை 5 மணிக்கு வெடிகுண்டு போன்ற சத்தங்கள் கேட்கப்பட்டன. இதற்கான அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் இதுவரை இல்லை. பத்தன்கோட்டில் இரவில் மின்கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு, மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
பாகிஸ்தான் ஷெல்லிங் தாக்குதல் காரணமாக ரஜோரி மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட வளர்ச்சி ஆணையர் ராஜ்குமார் வீடு சேதமடைந்தது. இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்கள் 26 இடங்களில் காணப்பட்டன. வடக்கில் பரமுல்லா முதல் தெற்கில் பூஜ் வரை இருந்த இடங்கள் பின்வருமாறு:
பரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நாக்ரோட்டா, ஜம்மு, பேரோசுபூர், பத்தன்கோட், ஜைசல்மேர், பார்மர், குவார்பெட், லகிநாலா மற்றும் பல இடங்கள்.
G7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பஹல்காம் தாக்குதலை கண்டித்து, இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அதிகப்படியான படை நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளன. மேலும் சமூக பாதுகாப்பு மிக முக்கியம் என அறிவுறுத்தியுள்ளன.
டெல்லி விமான நிலையம் இயல்பான முறையில் இயங்கினாலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
கார்த்தார்பூர் வழித்தடம் (Corridor) பாதுகாப்பு காரணமாக இந்தியா மூடியுள்ளது.
32 விமான நிலையங்கள் மே 15 காலை 5:29 மணி வரை மூடப்பட்டுள்ளன.
இஸ்லாமாபாத், லாகூர், சியால்கோட் ஆகிய இடங்களில் இந்திய ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியது. பாகிஸ்தான் ஜம்மு விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களை தாக்க முயன்றதும் இந்தியா S-400 போன்ற பாதுகாப்பு முறைகளால் தடுக்கப்பட்டுள்ளது.
மே 7 முதல் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், இந்தியா அதனை முற்றிலும் தடுக்கவும், பதிலடிக்கவும் செயல் படுகிறது. லாகூர் ஏர்ஃபோர்ஸ் பாதுகாப்பு அமைப்பு இந்தியா தாக்கியதும் குறிப்பிடத்தக்கது.
ஜம்மு மாநிலத்தின் சாம்பா பகுதியில் பயங்கரவாதிகள் நுழைய முயன்றதை BSF தடுத்து நிறுத்தியுள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் பூஞ்ச், ராஜோரி, யூரி மற்றும் குப்வாரா பகுதிகளில் பீரங்கி தாக்குதலை கடுமையாக நடத்தியது. மொத்தத்தில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து வருகிறது என்பது வந்து கொண்டிருக்கும் செய்திகளில் இருந்து தெரிய வருகிறது.