‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடைபெற்ற தாக்குதலுக்கு பின் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில், இந்தியா, பாகிஸ்தான் வெளியிட்ட பொய்யான குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுத்துள்ளது.
பாகிஸ்தான் கூறியது போல் இந்திய விமானப்படை தளங்கள் அழிக்கப்படவில்லை என்று தெளிவாக காட்டும் வீடியோக்களை இந்திய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோக்களில் விமானப்படை தளங்கள் முழுமையாக செயல்படும் நிலையில் உள்ளதும், எந்த சேதமும் ஏற்படாததும் தெளிவாக தெரிகிறது.
விங் கமாண்டர் வியோமிகா சிங், நேரம் மற்றும் தேதியுடன் கூடிய வீடியோ காட்சிகளை ஊடகங்களுக்கு வழங்கினார். இந்த காட்சிகளில் விமானங்கள் இயங்குவது, பணிகள் நடைபெறும் நிலை மற்றும் கட்டிடங்கள் பிழையின்றி இருப்பது போன்றவை இடம்பெற்றிருந்தன.
“பாகிஸ்தான் இதுபோன்ற பொய்களை கூறுவது, மக்களையும் உலகத்தையும் தவறாக வழிநடத்தவே தான்,” என வியோமிகா சிங் கண்டனம் தெரிவித்தார்.
வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் சொல்பபடி இந்தியா ஆப்கானிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், அமிர்தசரஸ் அருகே தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுவது முழுக்க முழுக்க ‘அபத்தமானதும், பொய்களுமாகும் என்று தெரிவித்தார்.
“ஆப்கானிஸ்தான் மக்கள் யார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது என்று நன்றாக அறிவார்கள்,” என்று மிஸ்ரி தெரிவித்தார்.
கர்னல் சோபியா குரேஷி கூறியபோது: “நாம் நிலத்தில் பாதுகாப்புத் தளங்களில் பணியாற்றும் படையில் ஈடுபட்டுள்ளோம். அதே நேரத்தில், பாகிஸ்தான் போலி தகவல்களால் போரை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.