பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், நேற்று தனது நாட்டு மக்களிடம் பேசிய போது “பாகிஸ்தானிய ரத்தத்தின் ஒவ்வொரு சொட்டுக்கும் பழி வாங்கி விடுவேன் என்று உறுதி செய்தார். இருப்பினும், அவரது நாட்டின் குடிமக்கள் அவரை “தன்னம்பிக்கையற்ற, பலவீனமாக தலைவர் என விமர்சித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் மே 7-ஆம் தேதி பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆதிக்கத்தில் உள்ள காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கிய நிலையில் நேற்று பாகிஸ்தான் பிரதமர் நாட்டு மக்களிடையே உரையாடினார்.
“இந்தத் தாக்குதலுக்காக இந்தியாவுக்கு எவ்வாறு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை கண்டுபிடிப்போம்… 26 குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அதில் குழந்தைகள் கூட உள்ளனர். ஒவ்வொரு பாகிஸ்தானிய ரத்தத்திற்கும் நாம் பழி வாங்குவோம் என்று கூறினார்.
இந்த உரையின் பின்னர், அவரது நாட்டின் குடிமக்கள் அவரின் பேச்சுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்தனர், மேலும் அவரது தோற்றம் மற்றும் உடல் மொழி மீது குற்றம்சாட்டினர்.
“பிரதமர் ஷெக்பாஸ் தன்னம்பிக்கையற்ற மற்றும் பலவீனமாக இருக்கிறார், இது நல்ல தோற்றம் அல்ல. இதை மட்டும் சொல்கிறேன்,” என்று ஒரு பாகிஸ்தானி X பயனர் பதிவிட்டார். “ஷெக்பாஸ் அங்கிள், 2x வேகத்தில் பேச ஆரம்பியுங்கள், மற்றும் ஒவ்வொரு விஷயத்திலும் பேச்சு தேவையில்லை, முக்கிய விஷயங்களில் மட்டுமே பேசுங்கள்,” என்று மற்றொரு குடிமகன் விமர்சித்தார்.
“ஷெபாஸ் ஷரீப் பேசிய வேகத்தைப் பார்க்கையில், போர் முடிந்தும் அவரது பேச்சு முடியும் எனத் தோன்றுகிறது,” என்று மற்றொரு பயனர் கூறினார்.
வெறும் பேச்சு மட்டும் தான் பிரதமரிடம் உள்ளது, செயலில் ஒன்றும் இல்லை என்று இன்னொரு பயனாளர் தெரிவித்தார்.ஒருமுறை கூட இந்தியாவை பாகிஸ்தானால் தோற்கடிக்க முடியவில்லை, இது நம்ப முடியாதது. மிகுந்த ஏமாற்றம். நீங்கள் எல்லாம் பிரதமராக இருக்கவே தகுதியில்லை என்று ஒருவர் பதிவிட்டார். மேலும் சிலர் பாகிஸ்தான் பிரதமரின் உருவ பொம்மையை எரித்தும், அவரது புகைப்படங்களை எரித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிகாட்டி வருகின்றனர்.
“ஷெபாஸ் ஷரீப் பேச்சில் இருந்து, இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க அவரிடம் எந்த திட்டமும் இல்லை என்று தெளிவாக தெரிகிறது,” என்று மற்றொரு பயனர் பதிவிட்டார். மொத்தத்தில் பாகிஸ்தான் பிரதமரை அந்நாட்டு மக்களே ஒரு கையாலாகாத பிரதமராகத்தான் பார்க்கின்றனர்.