பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் சமீபத்தில் சிஎன்என் ஊடகத்திற்கு பேட்டி அளித்தபோது, இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்று தெரிவித்தார். அதற்கு தொலைக்காட்சி நிருபர், “என்ன ஆதாரம்?” என்று கேட்க, அவர் பதிலளிக்கையில், “சோசியல் மீடியாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோவை பார்த்தேன்,” என்று கூறியுள்ளார். இது காமெடியின் உச்சமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று அதிகாலை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற முறையில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ படைகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை, என்றும், முழுக்க முழுக்க தீவிரவாதிகளின் முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியா எத்தனை விமானங்களில், எந்தெந்த இடத்தில் தாக்குதல் செய்தது என்பது போன்ற ஆதாரங்கள் வெளியாகி உள்ள நிலையில், “இந்தியாவின் ஐந்து விமானங்களை நாங்கள் சுட்டு வீழ்த்தி விட்டோம்,” என்று பாகிஸ்தான் தெரிவித்தது.
இந்த நிலையில், சிஎன்என் ஊடகத்திற்கு பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் பேட்டி அளித்த போது, இந்தியாவின் ஐந்து விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது என்று தெரிவித்தார். அப்போது நிருபர் அதற்கு, “என்ன ஆதாரம்?” என்று கேட்டபோது, அவர் கூறியது, “சோசியல் மீடியாவில் வெளியான வீடியோக்களை பார்த்து நான் நம்பினேன். அவை பாகிஸ்தான் சோசியல் மீடியா பயனாளர்களால் அல்ல, இந்திய பயனாளர்களால் பதிவிடப்பட்டவை,” என்று தெரிவித்தார்.
இது காமெடியின் உச்சமாக உள்ளது. ஒரு நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர், இன்னொரு நாட்டின் விமானத்தை சுட்டு வீழ்த்தியதை உறுதி செய்ய சோசியல் மீடியா வீடியோவை பார்த்து தெரிந்து கொண்டேன் என்பது காமெடியின் உச்சமாக இருக்கின்றது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.