பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் முன்னரே, பாகிஸ்தான் தயக்கம், பயம் மற்றும் பதற்றத்தில் இருந்து, தாங்களாகவே பயத்தில் உளற தொடங்கி விட்டது. உதாரணமாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், “இந்திய போரில் இருந்து எங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
இந்தியா தாக்குதல் நடந்த்தும் என்ற பயத்தில் உள்ள பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், “இந்தியாவுடன் போர் நடக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது, கடவுள் நம்மை அதிலிருந்து காப்பாற்றட்டும்,” என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஆதரவு கொண்ட பயங்கரவாதிகள், காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 26 இந்தியர்களை கொன்றதை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடர்ச்சியான ஆலோசனைகள் நடக்கின்றன. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அமைச்சர் கூறியதாவது: “இந்தியாவுடன் மோதல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகி வருகிறது. போர் நடக்காமல் தடுக்க கடவுள் நம்மை காப்பாற்றட்டும்.”
இந்த பயங்கரவாதிகள், வெறுமனே பொதுமக்களை கொல்லவில்லை. அவர்கள் குறிப்பாக இந்து மதத்தை சேர்ந்தவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களது மனைவிகள், பிள்ளைகள் மற்றும் பெற்றோர் கண்முன்னே சுட்டுத் தள்ளினர்.
இந்த தாக்குதலுக்குப் பின்னர், பிரதமர் மோடி கடுமையான எச்சரிக்கை கூறிய நிலையில், இந்தியா பெரிய நடவடிக்கை எடுக்கலாம் என்ற சூழ்நிலையில் உள்ளது. இதனால் பல நாடுகள் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை குறைக்க முயற்சி செய்தாலும், “இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வாய்ப்பு கூடிக்கொண்டே வருகிறது,” என்று கவாஜா அசிஃப் மீண்டும் கூறியுள்ளார்.
இந்த கருத்தை, பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வெளியே உள்ள ஊடகங்களுக்கு பதிலளிக்கும்போது கூறியுள்ளார். அவர் மேலும் கூறியது: “மோதலுக்கான வாய்ப்பு குறையவில்லை, அதிகரிக்கின்றது. பல நாடுகள் அதைத் தடுக்க முயற்சித்தாலும், நிலைமை மோசமாகவே செல்கிறது.” என்று கூறினார்.
பயத்தில் உள்ள பாகிஸ்தான், மோதல் வந்தால் பதில் தருவோம் எனவும் கூறுகிறது. ஒருபுறம் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிற கவாஜா ஆசிஃப், மறுபுறம், “இந்தியாவிடம் இருந்து ஏதாவது தாக்குதல் நடந்தால், நாங்கள் பதில் தருவோம். அது எப்படி இருக்கும் என்பதைக் இந்தியா செய்யும் காரியம் தீர்மானிக்கும். எங்களுடைய பதிலை பற்றிய எந்த சந்தேகமும் வேண்டாம்,” என்று கூறினார்.
அவர் மேலும் கூறியது: “இந்தியாவும் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் நம்மை இந்த மோதலில் இருந்து காப்பாற்றட்டும். ஆனால் பதில் தர வேண்டிய நிலை வந்தால், அது இந்திய நடவடிக்கையைவிட பெரியதாக இருக்கும்,” என கூறியுள்ளார். மொத்தத்தில் இந்தியாவின் வலிமையையும் தங்களுடைய வலிமையும் புரியாமல் அவர் உளறி வருவதாகவே பார்க்கப்படுகிறது. .