பேருந்தை நிறுத்திவிட்டு நமாஸ் செய்த டிரைவர்.. நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு?

  கர்நாடகா மாநில அரசு பேருந்து ஓட்டுனர் பயணிகளை ஏற்றி பேருந்தை இயக்கி கொண்டிருந்த நிலையில் திடீரென சாலையின் ஓரத்தில் நிறுத்தி நமாஸ் செய்யும்  சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த…

driver

 

கர்நாடகா மாநில அரசு பேருந்து ஓட்டுனர் பயணிகளை ஏற்றி பேருந்தை இயக்கி கொண்டிருந்த நிலையில் திடீரென சாலையின் ஓரத்தில் நிறுத்தி நமாஸ் செய்யும்  சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் அந்த ஓட்டுனர் பேருந்தின் இருக்கையில் நமாஸ் செய்து, அதில் அவர் முழுமையாக கவனம் செலுத்தி, எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கின்றார். பயணிகள் அவரை பார்க்கின்றனர். இதற்கிடையில், பேருந்தின் வெளியில் போக்குவரத்து வழக்கமாக நகர்ந்து கொண்டிருப்பதை காணலாம்.

இந்த சம்பவம் நேற்று முன் தினம் மாலை ஹுபல்லி ஹவெரி மார்க்கில் ஜாவெரி அருகிலுள்ள பகுதியில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் பரவிய பிறகு, கர்நாடகா போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி சம்பவத்திற்கு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

வடமேற்கு கர்நாடகா சாலை போக்குவரத்து நிறுவனத்தின் மேலாளருக்கு  கடிதம் எழுதிய அமைச்சர் ராமலிங்க ரெட்டி, பேருந்தை மத்தியில் நிறுத்தி நமாஸ் செய்யுதல் மிகவும் பொருத்தமற்றது என்றும் கூறினார்.

ஒரு பொது சேவையில் பணிபுரியும் ஊழியர்கள் குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அனைவருக்கும் தங்கள் மதத்தை கடைப்பிடிக்கும் உரிமை இருந்தாலும், அது அலுவலக நேரத்திற்கு அப்பால் மட்டுமே செய்ய முடியும். பயணிகள் ஏற்றியபோது பேருந்தை நிறுத்தி நமாஸ் செய்யுதல் பொருத்தமற்றது,” என அந்த கடிதத்தில்   கூறப்பட்டுள்ளது.

“இந்த வீடியோவை உடனடியாக விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுனர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க  வேண்டும். எதிர்காலத்தில் இப்படிப் பாரிய நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பது முக்கியம்,” என அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது

https://x.com/AngrySaffron/status/1917578202685276405