பிரதமர் மோடி, இந்தியாவின் முப்படை தலைவர்களுக்கும் முழு சுதந்திரத்தை அளித்து, எப்போது, எப்படி, எங்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை அவர்கள் முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார். ‘இது நம் நாட்டின் உறுதியான முடிவு, பயங்கரவாதத்திற்கு கடுமையான பதிலடி கொடுக்க போகிறோம்’ என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானை சேர்ந்த அனைத்து விமானங்களுக்கும் இந்திய வான்வழியில் நுழைய தடை விதித்துள்ளது.
இந்த தடை ஏப்ரல் 30 முதல் மே 23, 2025 வரை அமலில் இருக்கும். இது தரை நிலத்திலிருந்து மேல்மட்ட உயரம் வரை எல்லா நிலைகளிலும் பொருந்தும் என்பதை இந்திய சிவில் விமானத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்கு தங்களுடைய வான்வழியை மூடியது. அதே நேரத்தில், இந்தியாவின் எதிர்வினைக்கு பயந்து இருக்கும் பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீரிலும் உலகின் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் பாகிஸ்தான் வான்வழி தடை விதித்துள்ளது.
மேலும் இந்திய ராணுவத்தின் முக்கிய அதிகாரிகள், பாகிஸ்தானுக்கு தொலைபேசி வழியாக எச்சரிக்கை கொடுத்துள்ளனர். தொடர்ச்சியாக நிகழும் தாக்குதல்களையும், மோதல்களையும் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்’ என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா, சிந்து நீர்ப்பகிர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பின்பு, பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி, பின் தொடர்ந்து எல்லைகளில் பிரச்சனை செய்து வருகிறது. இந்தியாவும் பாகிஸ்தானுக்கு, ஒவ்வொரு முறையும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.