குடிக்க கூட தண்ணீர் இல்லை.. இந்தியாவில் வறட்சியின் உச்சத்தில் பாகிஸ்தான்..

  பாகிஸ்தானின் விவசாய துறையின் உயிராதாரம் என அழைக்கப்படும் இண்டஸ் நதி, இந்தியாவின் துணிவான நடவடிக்கையால் தற்போது ஒரு அசாதாரண நெருக்கடியை எதிர்கொள்கிறது. பஹல்காம் பயங்கரத் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா சிந்து நதிநீர்…

pakistan

 

பாகிஸ்தானின் விவசாய துறையின் உயிராதாரம் என அழைக்கப்படும் இண்டஸ் நதி, இந்தியாவின் துணிவான நடவடிக்கையால் தற்போது ஒரு அசாதாரண நெருக்கடியை எதிர்கொள்கிறது. பஹல்காம் பயங்கரத் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக எடுத்த முடிவு, பாகிஸ்தானை அதிர்ச்சி நிலைக்கு கொண்டுவந்துள்ளது. இந்தியா இந்த முடிவில் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதால், பாகிஸ்தானின் நீர்வளத்துறை அதிகாரிகள் நாட்டிற்கு ஆபத்தான சிக்னல்களை அளித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த IRSA ஆலோசனைக் குழுவின் சமீபத்திய கூட்டத்தில் பாகிஸ்தானின் மிக முக்கியமான நதிகளுக்கு இந்தியாவில்  இருந்து வரும் நீர் தான் ஆதாரமாக இருந்தது என்றும், தற்போது நீர் வரத்து சுத்தமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது,  இதனை சரிசெய்ய  புதிய நீர் வழங்கல் திட்டங்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன.

1960-இல் கையெழுத்தான இண்டஸ் நீர் ஒப்பந்தம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிடையிலான நீர் பகிர்வின் முக்கிய அடிப்படையாக இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தானுக்கு மேற்கத்திய துணைநதிகள், குறிப்பாக செனாப் நதியின் நீர் வழங்கப்படுகிறது, இந்தியாவிற்கு கிழக்கு துணை நதிகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், இந்தியா இந்த ஒப்பந்தத்தை நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாகிஸ்தானின் நீர் ஆதாரம் பாதுகாப்பு ஆபத்தில் சிக்கியுள்ளது.

இந்த நீர் பற்றாக்குறை, பாகிஸ்தானின் விவசாயத் துறைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் 80%  பயிர்கள் சிந்து நதிநீர் மீது சார்ந்துள்ளதால், நீர் வழங்கல் பாதிக்கப்படும் போது கோதுமை, அரிசி,  உற்பத்தியில் சிக்கல் ஏற்படும். இது இறுதியில் பாகிஸ்தானின் பொருளாதாரத்தில்  மற்றும் உணவு பாதுகாப்பில் தீவிர பிரச்சனைகளை உருவாக்கும்.

பாகிஸ்தானின் முக்கியமான  குளங்கள், தார்பேலா மற்றும் மங்க்லா அணைகள் தற்போது தங்கள் கொள்ளளவை 30% க்கும் குறைவாக வைத்திருக்கின்றன.

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட நிலையில், பாகிஸ்தான் நீர்வளத்துறை அதிகாரிகள், குளங்களின் நீரை திறம்பட பகிர்ந்து, மாநிலங்களுக்கு சமநிலை கொண்ட நீர் வழங்கலுக்கு திட்டமிட்டுள்ளனர். இந்த சிக்கலை தீர்க்கவும், நீர் அளவு குறைந்துள்ளதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை சீரமைப்பது மட்டுமே இந்த நீர் நிலையை சரி செய்ய முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இல்லாவிட்டால் பாகிஸ்தானுக்கு விவசாயம் மட்டுமின்றி குடிக்க கூட நீர் இருக்காது என்றும் அரசுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.