இஸ்லாம் இருக்கும் வரை தீவிரவாதம் நீடிக்கும்.. எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் பேச்சால் பரபரப்பு..!

  வெளிநாட்டில் தங்கியிருக்கும் பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடந்த இலக்கிய விழாவில் பேசினார். அப்போது, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலும், 2016-ஆம் ஆண்டு தாகாவில் நடந்த…

taslima

 

வெளிநாட்டில் தங்கியிருக்கும் பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடந்த இலக்கிய விழாவில் பேசினார். அப்போது, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலும், 2016-ஆம் ஆண்டு தாகாவில் நடந்த தாக்குதலும் ஒன்றே என தெரிவித்தார்.

“இஸ்லாம் 1,400 ஆண்டுகளில் மாற்றம் காணவில்லை. மாற்றம் காணாத வரை, அது தீவிரவாதங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கும்,” என்று கூறினார்.

இஸ்லாம் இருக்கும் வரை தீவிரவாதம் நீடிக்கும். ஐரோப்பாவில் தேவாலயங்கள் இப்போது அருங்காட்சியகங்களாக மாறிவிட்டன. ஆனால் முஸ்லிம்கள் எங்கு பார்த்தாலும் புதிய பள்ளிவாசல்கள் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஏராளமான பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அதிலிருந்து ஜிஹாத்கள் உருவாகிறார்கள்.”

“மதரஸாக்கள் தேவையில்லை. குழந்தைகள் எல்லா புத்தகங்களையும் படிக்க வேண்டும். ஒரே ஒரு மதபுத்தகத்தை மட்டும் அல்ல.”

“நான் அமெரிக்காவில் 10 ஆண்டுகள் வாழ்ந்தேன். ஆனால் கொல்கத்தாவுக்கு வந்தபின் தான் உண்மையான வாழ்க்கை எது என்று எனக்கு தோன்றியது . மேற்குவங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகும், டெல்லி என்னை ஆதரித்தது. இந்த நாடு எனக்கு சொந்த நாட்டை விட அதிக பாசிட்டிவ் உணர்வை அளித்துள்ளது. இந்தியாவை நான் நேசிக்கிறேன். இது என் வீடு போலவே இருக்கிறது.

பங்களாதேஷில் பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் இல்லை. ஒற்றுமையான குடிமைப் பட்ச சட்டம் இருக்க வேண்டும் என்றும் தஸ்லிமா நஸ்ரின் வலியுறுத்தினார்.

எல்லா நாகரிக நாடுகளிலும் மக்களின் உரிமைகள் மதத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது. கலாசாரம், மதம் அல்லது மரபு பெயரில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என்றால், அந்த கலாசாரத்தையே கேள்விக்குள்ளாக்க வேண்டும். ஒரு சமூகத்தில் பாதி மக்களாகிய பெண்கள் பாதுகாப்பாக இல்லையெனில், அது தோல்வியடைந்த சமூகம்தான்.

தஸ்லிமா நஸ்ரின் 1994-ஆம் ஆண்டு பிளாஸ்பெமி குற்றச்சாட்டுகளால் பங்களாதேஷிலிருந்து வெளியேறி, ஸ்வீடன், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் தங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,