இந்த தாக்கல் இரவு 8 மணி முதல் 11.30 மணி வரை நடந்தது. ஆனால் இந்திய ராணுவம் ஒரு வினாடிக்கும் தாமதிக்காமல் கடும் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் ஏவிய 500 ட்ரோன்களில் ஒன்று கூட இந்தியாவை எந்தவித பாதிப்புக்கும் உள்ளாக்க முடியவில்லை.
ரஷியாவால் தயாரிக்கப்பட்ட S-400 மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏர்ட் டிஃபென்ஸ் அமைப்புகள் மூலம் இந்தியா தன்னுடைய வான்வழி பாதுகாப்பை காக்கும் வகையில் எல்லா ட்ரோன்களையும் இந்திய நிலத்தை தொடவே விடவில்லை. வானிலையே அழித்தது. ஒரே ஒரு ட்ரோன் மட்டும் தான் ஜம்முவின் சிவில் விமான நிலையத்தை தாக்க முடிந்தது. இருப்பினும் அதனால் எந்தவித உயிர்ச்சேதமும் இல்லை.
பாகிஸ்தானின் இந்த தாக்குதல் முயற்சிக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் தன் சொந்த ட்ரோன்களை பாகிஸ்தானின் முக்கிய பகுதிகளில் தாக்கியது. குறிப்பாக தலைநகர் இஸ்லாமாபாத், இன்னொரு முக்கிய நகரமான லாகூர் மற்றும் சியால்கோட் ஆகிய பகுதிகளுக்கு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் பெரும் சேதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்திய ட்ரோன்களை வழிமறித்து அழிக்கும் எந்தவித தொழில்நுட்பமும் பாகிஸ்தானிடம் இல்லை என்பதால் பாகிஸ்தான் நிலைகுலைந்தது.
இந்தியாவில் உள்ள நவீன ஆயுதங்களை ஒப்பிடும்போது பாகிஸ்தானில் உள்ள ஆயுதங்கள் வெறும் காயலான் கடைக்கு போடும் அளவுக்கு குப்பைகள் என்றும் அந்த ஆயுதங்களால் இந்தியாவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் வல்லுனர்கள் கூறி வருகின்றனர். எனவே பாகிஸ்தான் வெற்று பேச்சு பேசாமல் இந்தியாவுடன் மோதல் போக்கை கைவிட்டால் மட்டுமே பாகிஸ்தான் தப்பிக்கும் என்றும் இல்லாவிட்டால் நான் பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.