இந்த நடவடிக்கையில் சிவில் விமான ஆணையம், மத்திய உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு விமான இயக்குனரகம் (DGCA) மற்றும் விமான பாதுகாப்பு பணியகம் (BCAS) ஆகியவை இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.
மூடப்பட்ட முக்கிய விமான நிலையங்கள் விவரங்கள் பின்வருமாறு:
ஜம்மு மற்றும் காஷ்மீர்: ஜம்மு, ஸ்ரீநகர், லேஹ், பாதிகோட், ஷிம்லா, தரம்சாலா, கக்கால்
பஞ்சாப் & ஹிமாச்சல் பிரதேசம்: அமிர்தசரஸ், லூதியானா, பாட்டியாலா, பத்திந்தா, ஹல்வாரா, புன்டார்
ராஜஸ்தான்: ஜெய்சல்மேர், ஜோத்பூர், பிகானீர்
குஜராத்: புஜ், கந்தளா, ஜாம்நகர், ராஜ்கோட், போர்பந்தர், கெஷோட், முண்ட்ரா
மற்றவை: குவாலியர், ஹிண்டன்
இந்த விமான நிலையங்களில் பெரும்பாலும் ராணுவம் மட்டுமே பயன்படுத்தப்படும் விமான நிலையங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜம்மு, ஸ்ரீநகர், லேஹ், ஜோத்பூர், அமிர்தசரஸ், புஜ், ஜாம்நகர், ராஜ்கோட், சந்திகட் ஆகிய நகரங்களுக்கு பறக்கும் அனைத்து விமானங்களும் மே 10 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன என ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட ஏர்லைன்கள் தெரிவித்துள்ளன. இன்று ஒரே நாளில் சுமார் 450 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விமான நிலையங்களில் பார்வையாளர்கள் நுழைவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எந்த விமான நிலையத்திலும் விமானத்தில் ஏறும் முன் பயணிகள் மீண்டும் ஒரு ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள்.