ரூ.8000 கோடி நிதி கொடுக்கும் IMF.. இந்தியா எதிர்ப்பு தெரிவிக்காமல் வாக்களிப்பில் இருந்து விலகியது ஏன்?

  தொடர்ச்சியான எல்லைதாண்டி தாக்குதல்கள், பாகிஸ்தானின் பொருளாதார குழப்பங்கள் மற்றும் இராணுவத்தின் செல்வாக்கு குறித்து உலக நாடுகள் கவலை கொண்டிருக்கும் நேரத்தில், இந்தியா ஒரு முக்கியமான IMF வாக்கெடுப்பில் வாக்களிக்காமல் விலகியது. இந்த வாக்கெடுப்பில்,…

imf

 

தொடர்ச்சியான எல்லைதாண்டி தாக்குதல்கள், பாகிஸ்தானின் பொருளாதார குழப்பங்கள் மற்றும் இராணுவத்தின் செல்வாக்கு குறித்து உலக நாடுகள் கவலை கொண்டிருக்கும் நேரத்தில், இந்தியா ஒரு முக்கியமான IMF வாக்கெடுப்பில் வாக்களிக்காமல் விலகியது.

இந்த வாக்கெடுப்பில், பாகிஸ்தானுக்கு ரூ.8000 கோடி நிதி வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்தியா அதில் பங்கெடுக்க மறுத்து, ஒரு மென்மையான ஆனால் வலுவான போராட்ட சைகையை உலகிற்கு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கடந்த 35 ஆண்டுகளில் 28 முறை ஐ.ம.எஃப் இடம் நிதி உதவி பெற்றிருக்கிறது. ஆனால் அதன் வளர்ச்சி, கட்டுப்பாடு, மற்றும் நிதி பொறுப்புகள் முன்னேறவில்லை.

புதிய காபன் வரி, மின்சாரம், நீர் விலை உயர்வு, கார் துறை சுதந்திரமாக்கம் போன்ற பல மாற்றங்களை செய்வதாக ஒப்பந்தம் செய்து, பாகிஸ்தான் 7 பில்லியன் டாலருக்கான நீட்டிக்கப்பட்ட நிதி திட்டத்தில் ரூ.8000 கோடி பெற உள்ளது.

இந்த கடனை பாகிஸ்தானுக்கு வழங்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு இந்தியா கூறிய காரணங்கள்:

1. பாகிஸ்தான், இந்த நிதியை முறையாக பயன்படுத்தாமல் மீண்டும் தீவிரவாதத்திற்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

2. பாகிஸ்தானில் நிதியியல் முடிவுகளை சர்வாதிகாரமாக இருக்கும் இராணுவமே நிர்வகிக்கிறது. பெரும்பாலான தொழில்கள் மற்றும் சொத்துகள் இராணுவ கம்பெனிகள் மூலம் இயக்கப்படுகின்றன. இது, மக்கள் ஆட்சி மற்றும் நிதி வெளிப்படைத்தன்மையை முழுமையாக குறைக்கும்.

3. பாகிஸ்தான் உட்புறமாக பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளித்து வருவதால், அந்நாட்டு மீது நிதி வழங்குவது, சர்வதேச ஒழுங்குகளை மீறும் செயல் என இந்தியா கருதுகிறது.

4. வாக்களிக்காமல் விலகுவது  என்பது IMF விதிகளில் எதிர்ப்பு தெரிவிக்கும் மிக உயர்ந்த பரிமாணம். இது, உலக நிதி அமைப்புகள் ஏன் ஒரு பாதுகாப்பில்லாத, பயங்கரவாத ஆதரவு நாடு மீது தொடர்ந்து நிதி செலவிடுகின்றன என்பதை காட்டும் ஒரு செயல்.

இந்தியா, மற்ற நாடுகளை தாக்கும் ஒரு நாட்டுக்கு மீண்டும் கடன் கொடுப்பது என்பது சர்வதேச நெறிமுறைகளை முறைப்படுத்தாமல் செய்யும் தவறு எனக் கூறியுள்ளது. வாக்களிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை விட, வாக்களிக்காமல் விலகுவது என்பது கூடுதல் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு சமம் என்பதால் இந்தியா வாக்களிக்காமல் இருந்தது. இதன்மூலம் IMFக்கு பயங்கரவாதம், ராணுவ ஆதிக்கம் கொண்ட நாடுகளுக்கு துணை நிற்க வேண்டியதில்லை என்பது இந்தியாவின் தைரியமான சிக்னலாக பார்க்கப்படுகிறது.