ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது.. மேலும் 2 அணைகளை மூடியது இந்தியா.. பாலைவனமாகுமா பாகிஸ்தான்?

  ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த தாக்குதலில்  சுற்றுலா பயணிகள் இந்து என அடையாளம்…

dam

 

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த தாக்குதலில்  சுற்றுலா பயணிகள் இந்து என அடையாளம் காணப்பட்டு பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர்ப்பங்கீட்டு ஒப்பந்தம்” தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரம்பான் பகுதியில் உள்ள பக்லிஹார் அணை மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள கிஷன்கங்கா அணை மூலமாக பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

பக்லிஹார் அணையின் நீர் வெளியேறும் வாயில்களின் கதவுகள் மூடப்பட்டு, பஞ்சாப் மாகாணம் நோக்கி செல்லும் நீர் ஓட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தற்காலிக நடவடிக்கையாக இருந்தாலும், பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கையாகும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருநாடுகளுக்கும் இடையே நீர் விநியோகம் குறித்த இந்த ஒப்பந்தம் 1960ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. ஆனால் தற்போது இந்தியா அதை நிறுத்தியுள்ளது பாகிஸ்தானை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பாகிஸ்தான் இதை போருக்கான காரணமாக பார்க்கிறது என்றும் கூறியுள்ளது.

மேலும், இந்தியா எடுத்துள்ள மற்ற கடும் நடவடிக்கைகள்:

பாகிஸ்தானிலிருந்து அனைத்து இறக்குமதிகளும் தடைசெய்யப்பட்டது

பாகிஸ்தான் கொடியுடன் வரும் கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் நுழைவு தடை

இந்திய – பாகிஸ்தான் தபால் சேவைகள் நிறுத்தம்

பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வழி மூடப்பட்டது