பாகிஸ்தான் நம்மள அமைதியா வாழ விடாது.. முடிச்சுவிடுங்க மோடி: ஒவைசி ஆவேசம்..!

AIMIM கட்சித் தலைவர் அசதுதீன் ஓவைசி, பாகிஸ்தானை “தோல்வியடைந்த நாடு” என்று வர்ணித்து, இந்திய அரசாங்கம் அதற்கு எதிராக வலிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஓவைசி, “பாகிஸ்தானைச்…

ovaisi

AIMIM கட்சித் தலைவர் அசதுதீன் ஓவைசி, பாகிஸ்தானை “தோல்வியடைந்த நாடு” என்று வர்ணித்து, இந்திய அரசாங்கம் அதற்கு எதிராக வலிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஓவைசி, “பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மீதும், அந்த தோல்வியடைந்த நாடான பாகிஸ்தான் மீதும் வலிமையான நடவடிக்கையை பிரதமர் மோடி எடுக்க வேண்டும். இனிமேல் இந்தியாவை பாதிக்க யாரையும் அனுப்ப நினைத்தால், 100 முறை யோசிக்கும்படி செய்கிற அளவுக்கு தட்டிக்கேட்க வேண்டும்,” என்றார்.

“பாகிஸ்தான் கொஞ்சம் கூட நேர்மையின் தாக்குதலுக்கு தீர்க்கமான ஆதாரம் எங்கே?’ என்று கேட்கிறது. பத்தான்கோட்டில் இந்திய விமானப்படை மையத்தில் தாக்குதல் நடந்த போது, பாகிஸ்தான் அதிகாரிகளை நேரில் அழைத்து ஆதாரத்தை காட்டினோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்று அவர் விமர்சித்தார்.

“தங்கள் நாட்டில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு வந்து இந்தியர்களை கொல்கிறார்கள் என்பதற்கும், பாகிஸ்தான் ஒருபோதும் பொறுப்பேற்க மாட்டார்கள். இப்போது அவர்களை சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டிய காலம் முடிந்துவிட்டது,” என்றார்.

மேலும் “பாகிஸ்தான் ஒரு தோல்வியடைந்த நாடு. இது போன்ற நாடுகள் இந்தியாவை அமைதியாக வாழ விடாது. இப்போது அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்றார்.

இந்தியாவைச் சுட்டி யாராவது விரல் நீட்டினால், நாம் எல்லோரும் ஒற்றுமையாக கைகோர்த்து நிற்க வேண்டும். பாகிஸ்தானை ‘FATF’ என்ற பணமோசடி, பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பின் கிரே லிஸ்டில் சேர்க்க வேண்டும்,” என்றார்.

நீங்கள் என்ன ஏவுகணை சோதனை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் இந்தியா எப்போதும் உங்கள் நாட்டை விட சக்திவாய்ந்தது என்பதை மறக்காதீர்கள்,” என்று ஓவைசி எச்சரித்தார்.