இஸ்லாமாபாத், லாகூரை ஒரே நிமிடத்தில் அழிக்க முடியும்.. இந்தியாவிடம் 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் Atom பாம்..!

  ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே முழு அளவிலான போர் நடைபெறும் அபாயம் பெரிதாகியுள்ளதாக கூறப்படுகிறது. இரு நாட்டு மக்கள் மட்டுமின்றி, உலக…

atom

 

ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே முழு அளவிலான போர் நடைபெறும் அபாயம் பெரிதாகியுள்ளதாக கூறப்படுகிறது. இரு நாட்டு மக்கள் மட்டுமின்றி, உலக நாடுகளும் மிகுந்த பதட்டத்தில் உள்ளன. ஏனெனில் இது இரு அணுசக்தி நாடுகளுக்கிடையிலான போராக மாறக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுதம்: யாரிடம் அதிக சக்தி?

இந்தியாவிடம் சுமார் 180 அணு ஆயுதங்கள், பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவின் அணு ஆயுதங்கள், தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்டவை. பாகிஸ்தானிடம் உள்ளவை பெரும்பாலும் அடிப்படை அணு வெடிகுண்டுகள் (Atom bombs) எனக் கூறப்படுகிறது.

இந்தியாவிடம் தெர்மோ அணு வெடிகுண்டுகள் (Hydrogen Bombs) உள்ளன, இது ஒரு சாதாரண அணு வெடிகுண்டை விட 1,000 மடங்கு சக்திவாய்ந்தது. இந்த அணு வெடிகுண்டை இந்தியா பயன்படுத்தினால் ஒரே நிமிடத்தில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர் ஆகிய இரண்டு நகரங்களை அழிக்க முடியும் என கூறப்படுகிறது.

ஹைட்ரஜன் vs Atom பாம் – வேறுபாடு என்ன?

Atom பாம் என்பது 1945ல் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் வீசப்பட்டதாகும். இது nuclear fission எனப்படும் அணுகலையின் மூலம் வெடிக்கிறது. ஆனால் ஹைட்ரஜன் பாம் அல்லது Thermonuclear bomb, இரண்டு கட்டங்களை கொண்டது. முதல் கட்டத்தில் Plutonium அல்லது Uranium உபயோகிக்கப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் Hydrogen atoms ஒன்றாக சேர்ந்து fusion மூலம் மிகப்பெரிய சக்தி வெளிப்படுத்துகிறது. இது Atom பாமைவிட 1000 மடங்கு சக்திவாய்ந்தது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, மற்றும் இந்தியா ஆகிய ஆறு நாடுகள் மட்டுமே ஹைட்ரஜன் பாம் சோதனை செய்துள்ளன. இந்தியா, 1998-ஆம் ஆண்டு, ஐந்து அணு ஆயுத சோதனைகள் நடத்தியபோது, ஒன்று ஹைட்ரஜன் பாமாக இருந்தது என கூறப்படுகிறது.

பாகிஸ்தான், தெர்மோ அணு ஆயுதம் வைத்திருக்க வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை, ஏனெனில் அணு ஆயுத தகவல்கள் அதிகமாக வெளியிடப்படுவதில்லை.

Atom பாம் உருவாக்குவது சற்றே எளிது, யுரேனியம் கொண்டு fission மூலம் செய்யலாம். ஆனால் ஹைட்ரஜன் பாம் உருவாக்க, இரண்டு கட்ட அணு நடவடிக்கைகள் தேவை. இது மிகவும் சிக்கலான விஷயம் என்பதால், சில நாடுகளுக்கு மட்டுமே இதை சாதிக்க முடிந்துள்ளது.