இந்தியாவை பகைத்து கொள்ள தயாராக இல்லை.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த முஸ்லீம் நாடுகள்..!

  பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த…

islamic

 

பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பிறகு, பல இஸ்லாமிய நாடுகள் கூட இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. எந்த ஒரு நாடும் மத ஒற்றுமையைவிட, தங்களது புவியியல் மற்றும் பொருளாதார நலன்களை முன்னிலை படுத்துகின்றன.

ஈரானும் துருக்கியும், பாகிஸ்தானுக்கு நேரடி ஆதரவு அளிக்காமல், நடுநிலை உணர்வுடன், உரையாடல் மூலம் பிரச்சனையை சமாளிக்க முனைந்துள்ளன. ஈரான், இந்த பதற்றத்தை குறைக்க மூலமாக நடுவர் நபராக இருப்பதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியா, யு.ஏ.இ., கட்டார் போன்ற வளைகுடா நாடுகள், இந்தியாவுடன் வணிகம், எரிசக்தி வர்த்தகம் ஆகியவற்றின் மூலமாக நெருக்கமாக உள்ளன. இந்தியா, இவர்களுக்கு பெரிய பொருளாதார கூட்டாளியாக இருப்பதால், பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்க தயங்குகின்றன.

சவுதி அரேபியா, பஹல்காம் தாக்குதலைப் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. காஷ்மீர் பிரச்சனை இந்தியா–பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு விவகாரம் என மட்டும் தெரிவித்துள்ளது.

‘விஷன் 2030’ திட்டத்தின் கீழ், சவுதி அரேபியா புதிய வருமான வாய்ப்புகளை தேடுகிறது. இதில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருப்பதால், எந்தவொரு சர்ச்சையிலும் ஈடுபட விரும்பவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், கட்டாரும் இந்த விவகாரத்தில் நடுநிலையை எடுத்துள்ளது. அதன் வெளிநாட்டு கொள்கை, மத ஒற்றுமையைவிட பொருளாதார நிலைத்தன்மையை முக்கியமாக கருதுகிறது.

மொத்தத்தில் மத அடிப்படையைவிட பொருளாதாரம் முக்கியம் என்பதையே இஸ்லாமிய நாடுகளின் நடத்தை இப்போது வெளிப்படுத்துவதால் பாகிஸ்தானுக்கு இஸ்லாமிய நாடுகளின் ஆதரவு கூட கிடைக்கவில்லை. சீனா போன்ற நட்பு நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.