வந்தே பாரத் ரயில் சேவை 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2025ஆம் ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி, நாட்டில் 136 வந்தே பாரத் ரயில்கள் ஓடுகின்றன. இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலில் மாணவர்கள், தொழிலாளர்கள், நடுத்தர மக்களுக்காக கட்டணத்தை குறைக்க முடியுமா என்ற கேள்வி, சமீபத்தில் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. காங்கிரஸ் எம்பி ரகீபுல் ஹுசேன், ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்யிடம் இதை கேட்டபோது, மத்திய அரசு கட்டண மறுசீரமைப்பை பரிசீலித்து வருகிறது என தெரியவந்தது.
சலுகை கட்டணங்கள், அல்லது வருமானம் அடிப்படையிலான கட்டண திட்டங்கள் போன்றவை பரிசீலனையில் உள்ளன. இது வந்தே பாரத் ரயில்களை அனைவருக்கும் ஏற்றதாக மாற்றும்.
வந்தே பாரத் ரயிலை ஒரு வழித்தடத்தில் ஓட்டுவதற்கான செலவு எவ்வளவு ஆகிறது என்பதை பார்ப்போம்.
மின்சார செலவு: ₹2–3 லட்சம்
பராமரிப்பு: ₹1–1.5 லட்சம்
ஊழியர்கள் சம்பளம்: ₹0.5–1 லட்சம்
கூடுதலாக: உணவு, தூய்மை, சிறப்பு சேவைகள்
ஆனால், கட்டணத்தை குறைப்பது ஒரு கடினமான முடிவாக இருக்கிறது. ஆனாலும் அரசு லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு விரைவில் கட்டணத்தை குறைக்க திட்டமிட்டுள்ளது.
சென்னை ICF ல் உருவாக்கப்பட்ட இந்த ரயில்களில் தானாக திறக்கும் கதவுகள், உட்கார வசதியான இருக்கைகள், ஃப்ரீ வைஃபை, பயோ-வாக்யூம் கழிவறைகள் போன்ற நவீன வசதிகள் உள்ளன. மேலும், 160 கி.மீ. வேகத்தில் ஓடக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.