பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை கைப்பற்ற வேண்டும் என வங்கதேசம் ஓய்வு பெற்ற ராணுவ படைத்தலைவர் பாசூர் ரஹ்மான் பரிந்துரை செய்துள்ளார். இந்த கருத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் தற்போது வங்கதேச மத்திய இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் என்பவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் “இந்தியா பாகிஸ்தானை தாக்கினால், இந்தியாவின் கிழக்கில் உள்ள ஏழு மாநிலங்களை வங்கதேசம் பிடிக்க வேண்டும். இதற்காக சீன உதவியை நாட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், வங்கதேச இடைக்கால அரசு, ரஹ்மானின் கருத்துக்களை மறுத்து கூறியுள்ளது. வங்கதேச தலைமை ஆலோசகர், செய்தியாளர்களுடன் பேசிய போது, இந்த கருத்துகள் ரஹ்மானின் தனிப்பட்ட கருத்துகள் என்றும், இடைக்கால அரசு இதை ஆதரிக்கவில்லை என்றும் தெரிவித்தார். “இத்தகைய கருத்துகளை வங்கதேசம் எப்போதும் கூறாது. வங்கதேசம் அனைத்து நாடுகளின் சுதந்திரத்தையும் மற்றும் நட்பையும் மதிக்கிறது,” என அவர் கூறினார்.
இந்த பரபரப்பான கருத்துக்கள், முகமது யூனஸ் சீனாவுக்கு சமீபத்தில் மேற்கொண்ட பயணத்தின்போது வெளியானவையாகும். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்தியாவின் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏழு மாநிலங்கள் வங்கதேசத்துடன் தொடர்புடையவை. இந்தியாவில் இருந்து கடல் வழியாக செல்ல முடியாத மாகாணங்கள் என்பதால் வங்கதேசம் இவற்றை சொந்தமாக கொண்டாடுகிறது என்று தெரிவித்தார். இந்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கின்றன.