தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு கார் ரேசிங்கில் தான் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. தனது 18 வது வயதில் கார் ரேசிங்கில் கலந்து கொண்டார் அஜித்குமார். அந்த நேரத்தில் மாடலிங்கும் செய்து வந்தார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
1990களில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான அஜித் குமார் காதல் மன்னன் வாலி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு பல கமர்சியல் வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஆனார் அஜித்குமார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறி பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீசானது. இந்த படம் தள்ளிப் போனதால் எல்லா திரைப்படங்களின் ரிலீஸும் குழப்பத்திற்கு உள்ளானது. அதே போல் இவர் நடித்த Good Bad Ugly திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல விமர்சனங்களை பெற்றது.
தற்போது அஜித்குமார் பத்மபூஷன் விருதை பெற்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு அவர் கொடுத்த நேர்காணலில் மக்கள் வாழ்க்கையை எப்படி பார்க்கிறார்கள் என்பதை பற்றி பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், தினமும் காலையில் நாம் உயிரோடு விழிப்பதே மிகப்பெரிய வரம். அதை புரிந்து கொள்ளாமல் மக்கள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையை பற்றி குறை கூறுகிறார்கள். என் நெருங்கிய உறவினர்கள் புற்றுநோய் ஏற்பட்டு மீண்டும் வந்த பலரையும் நான் பார்த்திருக்கிறேன். நானும் பல காயங்கள் மற்றும் சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு இருக்கிறேன். அதனால் தினமும் ஆரோக்கியமாக உயிரோடு கண்விழிப்பதே மிகப்பெரிய வரமாக நான் கருதுகிறேன். மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பகிர்ந்து இருக்கிறார் அஜித்குமார்.