இந்திய விமானப்படை, கடந்த சனிக்கிழமை அதிகாலை, பாகிஸ்தானின் 8 முக்கிய ராணுவ தளங்களில் துல்லியமான தாக்குதலை மேற்கொண்டது. இது, பாகிஸ்தான் ஒருங்கிணைந்த முறையில் இந்திய விமானப்படையின் உதம்பூர், பதான்கோட், ஆதம்பூர், பூஜ் ஆகிய தளங்கள் மற்றும் ஸ்ரீநகர், அவந்திபோரா ஆகிய இடங்களில் குறிவைத்து தாக்கியதற்கான பதிலடி ஆகும் என வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான், ட்ரோன், ஏவுகணைகள், மற்றும் யுத்த விமானங்களை பயன்படுத்தி இந்திய ராணுவம் மற்றும் பொதுமக்கள் வசதிகளை குறிவைத்து தாக்கியுள்ளது. இந்த தாக்குதலின் போது, உதம்பூர், பதான்கோட், ஆதம்பூர் மற்றும் பூஜ் ஆகிய விமானப்படை தளங்களில் சாதனங்கள் மற்றும் வீரர்களுக்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டதாகக் கர்னல் சோபியா குரேஷி தெரிவித்தார்.
முக்கியமாக, பாகிஸ்தான், ஸ்ரீநகர், அவந்திபோர், உதம்பூரில் உள்ள மருத்துவ மையங்கள் மற்றும் பள்ளிக் கட்டடங்களையும் குறிவைத்து தாக்கியது. மேலும், பஞ்சாபை நோக்கி அதிக வேக ஏவுகணை ஒன்றையும் இரவு 1.40 மணியளவில் பாகிஸ்தான் செலுத்த முயன்றது.
இந்திய ராணுவம் மிக சரியாக, திட்டமிட்டு மேற்கொண்ட இந்த பதிலடி, பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்புகளையே மட்டுமே குறிவைத்து மேற்கொள்ளப்பட்டது” என கர்னல் குரேஷி கூறினார். தாக்கப்பட்ட இடங்களில் கட்டுப்பாட்டு மையங்கள், ராடார் மையங்கள், ஆயுத சேமிப்பிடம் உள்ளிட்டவை அடங்கும்.
தாக்கப்பட்ட பாகிஸ்தான் ராணுவ தளங்கள்:
ரஃபிகி
முரீத்
சக்லாலா
ரஹீம் யார் கான்
சுக்கூர்
சுனியன்
பஸ்ரூர் ராடார் மையம்
சியால்கோட் விமான தளம்
இந்திய விமானப்படை, காற்றில் இருந்து துல்லியமாக தாக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. பொதுமக்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் கவனமாக செயல் படப்பட்டதாக வெளிவிவகார அமைச்சகம் கூறியுள்ளது.
இதேவேளை, பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லை மற்றும் சர்வதேச எல்லைக்கு அருகே கூப்வாரா, பரமுலா, பூஞ்ச், ரஜௌரி, அக்னூர் ஆகிய பகுதிகளில் குண்டுகளை வீசியுள்ளது. இதில் ரஜௌரியின் கூடுதல் மாவட்ட வளர்ச்சி அதிகாரி உயிரிழந்தார்; ஃபிரோஸ்பூர், ஜலந்தர் பகுதிகளில் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது, “பொதுமக்கள் இருக்கும் பகுதியில் பாகிஸ்தான், ராணுவ விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய செயல் கண்டிக்கத்தக்கது.
இந்நிலையில், “இந்திய தாக்குதல்கள் மிகுந்த திட்டமிடப்பட்டது என்றும், எதிரியின் ட்ரோன் மற்றும் விமான சக்திகளை மட்டும் தளர்த்துவதே நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.. போர் விரிவடைய வேண்டும் என்பது எங்கள் விருப்பம் அல்ல என வெளியுறவுத் துறை மறுபடியும் தெரிவித்துள்ளது.