அடியோடு ஒழிகிறது பயங்கரவாதம்: 5 முக்கிய பயங்கரவாத தலைவர்கள் அழிப்பு.. முழு விவரங்கள்..

  ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை சுட்டு துல்லியமாக தாக்கியது. இதில் ஜெய்ஷ்-எ-முகம்மது…

dead

 

ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை சுட்டு துல்லியமாக தாக்கியது. இதில் ஜெய்ஷ்-எ-முகம்மது மற்றும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புகளின் முக்கியத் தளங்களான பஹாவல்பூர் மற்றும் முரிட்கே பகுதிகளும் அடங்கும்.

இந்த தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஐந்து முக்கியமான பயங்கரவாத தலைவர்களும் அடங்குகிறார்கள்:

1. முதசர் காடியான் காஸ் (அலியாஸ் அபூ ஜுந்தல்) – லஷ்கர்-ஏ-தொய்பா தலைவர்; முரிட்கே-யில் உள்ள மார்க்கஸ் தாய்பாவை நடத்தினார். இவரது மரணஅஞ்சலி பிரார்த்தனை பாக். இராணுவ அதிகாரிகளால் நடத்தப்பட்டது.

2. ஹபீஸ் முகம்மது ஜமீல் – ஜெய்ஷ் அமைப்பைச் சேர்ந்தவர். அதன் தலைவர் மவ்லானா மசூத் அஸரின் மாமனார். இளைஞர்களை தீவிரவாதமாக மாற்றவும் நிதி திரட்டவும் முக்கிய பங்கு வகித்தார்.

3. முகமது யூசுப் அஸர் (அலியாஸ் உஸ்தாத் ஜி) – ஜெய்ஷ் அமைப்பில் பயிற்சி தலைவராக இருந்த இவர், ஐ.சி-814 விமான கடத்தல் வழக்கில் இந்தியாவால் தேடப்பட்டவர்.

4. காலித் (அலியாஸ் அபூ அகாஷா) – லஷ்கர் அமைப்பில் முக்கிய பாத்திரம் வகித்தவர். காஷ்மீரில் பல தாக்குதல்களில் ஈடுபட்டதோடு, ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயுதக் கடத்தலிலும் சம்பந்தப்பட்டிருந்தார்.

5. முகமது ஹசன் கான் – ஜெய்ஷ் அமைப்பைச் சேர்ந்தவர். பாக் ஆக்கிரமித்த காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தவர்.

இந்த தாக்குதலால் பயங்கரவாதம் அடியோடு ஒழிய வாய்ப்பு இருப்பதாகவும், இந்தியா நடத்திய இந்த தீர்மானமான தாக்குதல், நாட்டின் பாதுகாப்பையும், பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது.