முதல்முறையாக தொங்கு சட்டசபை.. விஜய் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க திராவிட கட்சிகளால் முடியாது..!

  தமிழகத்தில் முதல் முறையாக தொங்கு சட்டசபை ஏற்படும் என்றும், திமுக அல்லது அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகள் விஜய் கூட்டணியின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை ஏற்படும்…

eps mks vijay

 

தமிழகத்தில் முதல் முறையாக தொங்கு சட்டசபை ஏற்படும் என்றும், திமுக அல்லது அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகள் விஜய் கூட்டணியின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை ஏற்படும் என்றும் பிரபல பத்திரிகையாளர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரை 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் 118 தொகுதிகளில் வென்றால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். ஆனால் இப்போதைய நிலைமையை பார்க்கும் போது, இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டணிக்கும் பெரும்பான்மையை பெறாது என்று பிரபல பத்திரிகையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகபட்சமாக இரண்டு கூட்டணிகளும் தலா 80 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும், மீதமுள்ள 38 தொகுதிகள் விஜய் கூட்டணி ஆதரவு கொடுத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

அப்படி ஒரு நிலைமை வந்தால், விஜய் முதல்வர் பதவி தனக்கு வேண்டும் என்று கேட்பார் என்றும், மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமைத்து ஷிண்டே முதல்வர் ஆனது போல், தமிழகத்தில் விஜய் முதல்வராக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் பதவியை கொடுக்க திமுக ஒப்புக் கொள்ளாது என்பதால், அதிமுகவுடன் விஜய் இணைந்து ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், விஜய் கேட்டபடி அவருக்கு முதல்வர் பதவியை கொடுத்துவிட்டு, எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இரண்டு திராவிட கட்சிகளும் வேண்டாம் என்று இருக்கும் வாக்காளர்கள் தமிழகத்தில் மிக அதிகம் என்றும், மூன்றாவதாக ஒரு நம்பிக்கை கூறிய நபர் இல்லாத காரணத்தினால் தான் மாறி மாறி திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து வந்தனர்.

விஜயகாந்த், கமல்ஹாசன் போன்றவர்களை நம்பி ஏமாந்த அந்த நடுத்தர மக்களுக்கு இப்போது விஜய் ஒரு நம்பிக்கை அளிக்கும் தலைவராக தெரிகிறார் என்றும், அதனால் இந்த ஒரு வருடத்தில் விஜய் மிக தீவிரமாக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்தார் என்றால், அவர் 118 என்ற மந்திர எண்ணை நெருங்க கூட வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.