பிரதமர் மோடியை கொல்ல போடப்பட்ட திட்டம் மிஸ் ஆனதா? பெகல்ஹாம் தாக்குதல் குறித்து திடுக் தகவல்..!

  ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தது. இது பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 19ஆம் தேதி காஷ்மீருக்கு செல்லவிருந்த நேரத்துடன் பொருந்தியது…

pahalgam

 

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தது. இது பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 19ஆம் தேதி காஷ்மீருக்கு செல்லவிருந்த நேரத்துடன் பொருந்தியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீநகருக்கு அருகே தாக்குதல் நடத்தப்படும் என உளவுத்துறை மற்றும் பிற அமைப்புகள் குறிப்பிட்டிருந்தாலும், பஹல்காம் குறித்த எச்சரிக்கை இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

உளவுத்துறை தகவலின் அடிப்படையில் ஸ்ரீநகர் மற்றும் சுற்றுவட்டார சுற்றுலா மையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. டாசிகாம் தேசிய வனம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக மோடி விஜயம் ரத்து செய்யப்பட்டது. ஒருவேளை பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தபடி காஷ்மீருக்கு சென்றிருந்தால் விபரீதம் ஏற்பட்டு இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதையடுத்து, ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் பயணிகள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். மத அடிப்படையில் நடத்தப்பட்ட தாக்குதல் என போலீஸ் தெரிவித்துள்ளது.

10 முறை எச்சரிக்கை வந்தாலும், பெரும்பாலும் தாக்குதல் நடக்காது. ஆனால் இந்த முறை உளவுத்துறை கொடுத்த தகவல் சரியாக இருந்தது. ஆனால் தாக்குதல் நடக்கும் இடத்தை கணிக்க முடியவில்லை,” என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஏப்ரல் 18–19 தேதி மோசமான வானிலை ஏற்படும் என வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கையளித்ததால், பிரதமர் அலுவலகம் அவரது பயணத்தை நான்கு நாட்கள் முன்பே ரத்து செய்தது. பிரதமர் ஹெலிகாப்டரில் மூன்று இடங்களுக்கு பயணிக்க திட்டமிட்டிருந்தாலும், மழை மற்றும் காற்று காரணமாக விமானப் பயணம் கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைமை இயக்குநர் நலின் பிரபாத் ஸ்ரீநகரில் நான்கு நாட்கள் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்தார். தாக்குதல் நடந்த வேளையில் அவர் ஜம்முவில் இருந்தார். உடனடியாக மீண்டும் ஸ்ரீநகருக்கு திரும்பினார்.

பிரதமர் மோடி விஜயம் ரத்து செய்யப்பட்ட பிறகு, பயங்கரவாதிகள் மறைந்திருந்தனர். பிறகு, ஏப்ரல் 16ஆம் தேதி அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தாக்குதலுக்கான வாய்ப்பு உருவானது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் தாக்குதல் நடக்கும் என்பதை முன்னதாக கணிக்க முடியாமை மிகப்பெரிய தவறாக இருந்தது என்று தெரிவித்தனர்.

அந்த தாக்குதலில் இருந்த நால்வரில் இருவர் உள்ளூர் பயங்கரவாதிகள். அவர்கள் சுற்றுலா பயணிகளை ஒருபுறம் கூட்டி சென்றனர். பிறகு வெளிநாடுகளை சேர்ந்த இருவர் துப்பாக்கி சூடு நடத்தினர். அந்த இடத்தில் ஒரே ஒரு நுழைவு மற்றும் வெளியேறும் வழி இருந்ததால், சுற்றுலா பயணிகள் தப்பிக்க முடியவில்லை,” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயங்கரவாதிகள் ஏற்கனவே அந்த பகுதியில் மறைந்து இருந்ததையும்தொடர்ந்து அங்கேயே இருந்ததையும் உள்ளூர் உளவுத்துறை கண்டுபிடிக்காததும் பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.