பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி, நேற்று தரம்சாலாவில் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென விமான தாக்குதல் எச்சரிக்கை காரணமாக, நிறுத்தப்பட்டது.
சரியான முறையில் திட்டமிடப்பட்ட 74 போட்டிகளில் 58 போட்டிகள் நடைபெற்று விட்டன. இந்நிலையில் நாடு போரில் இருக்கும்போது கிரிக்கெட் போட்டி நடைபெறுவது சரி எனத் தோன்றவில்லை,” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் பி.டி.ஐக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார், இதன் மூலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
2025 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டியில் நிலுவையில் உள்ள 16 போட்டிகள், ஏற்கனவே மே 25 அன்று முடிவடைய வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தது, இவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதா? அல்லது நிரந்தரமாக நிறுத்தப்படுகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை அடிப்படையாக கொண்டு போட்டி நிறுத்தப்படுவதாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே பாகிஸ்தான் பிரிமியர் லீக் போட்டிகள் நிறுத்தப்பட்டு அரபு நாடுகளில் தொடர திட்டமிட்டுள்ள நிலையில் ஐபிஎல் போட்டியும் வெளிநாட்டில் நடத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.