இந்திய நகரங்களை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் அத்தியாவசியமற்ற தாக்குதலை மேற்கொண்ட நிலையில், பதிலடி கொடுத்து வரும் இந்திய அரசு, தற்போது சமூக வலைதளங்களிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
நேற்று ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பல நகரங்களை நோக்கி பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை முயன்றது. ஆனால் இந்த தாக்குதல்கள் தோல்வியடைந்தன. இதற்கு பதிலாக, இந்திய விமானப்படை மூலம் பாகிஸ்தானுக்கு கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில், சமூக ஊடகத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தவறான தகவல்களை பரப்பிய 8,000-க்கும் மேற்பட்ட “X” கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் பாகிஸ்தானின் தீவிர நடவடிக்கைக்கு இந்திய அரசின் சரியான பதிலடி என கூறப்படுகிறது. போலி தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்ப சமுக ஊடகங்கள் பயன்படுத்தப்படக்கூடாது என்பதே அரசின் நோக்கம்.
இந்திய அரசின் உத்தரவுகளை ஏற்றுக்கொள்கிறோம், என்று “X” நிறுவனமும் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்கள் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயனர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள சில பாகிஸ்தான் ஆதரவாளர்கள் தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் ஏவுகணைகளை பாகிஸ்தான் வீழ்த்திவிட்டது என்றும் இந்திய தரப்பில் கடும் சேதம் என்றும் பழைய வீடியோக்களை பகிர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது போன்ற பொய்யான தகவல்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் என்பதால்தான் தற்போது பொய்யாக தகவல் பரப்பும் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய அரசுக்கு எதிராகவோ, பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவாகவோ யாரும் சமூக வலைதளத்தில் பொய்யான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே இனி யாரும் பொய்யான தகவல்களை பரப்ப முடியாத வகையில் மோடி அரசு ஆப்பு வைத்துவிட்டதாக கருதப்படுகிறது.