இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஒரு நிமிட சிரிப்பை உருவாக்கியது போலவே, இந்திய அரசின் ஊடக பிரிவு பாகிஸ்தான் அரசை மீம்ஸ் மூலம் கடுமையாக கலாய்த்துள்ளது.
காரணம் என்னவென்றால், பாகிஸ்தான் அரசு, “போர் நடத்துவதை சமாளிக்க பணம் இல்லை” எனக் கூறி, உலக நாடுகளிடமிருந்து நிதி வசூலிக்க முயன்றது. இன்று பாகிஸ்தானின் பொருளாதார விவகார பிரிவு, “எதிரியின் தாக்குதலால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது” என்றும், நிலைமை அடங்குவதற்கு தங்களது கூட்டாளிகள் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.
நிதி கேட்டு பாகிஸ்தான் கெஞ்சியது கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. பின்னர், பாகிஸ்தான் அரசு “இந்த பதிவு எங்களால் வெளியிடப்பட்டது இல்லை… எங்கள் X கணக்கு ஹேக் செய்யப்பட்டது” என்று விளக்கம் அளித்தது. ஆனால், இதை யாரும் நம்பவில்லை.
உடனே, இந்திய ஊடகத் துறை இந்த சம்பவத்தை வைத்து ஹிட் மீம்ஸ் ஒன்றை வெளியிட்டு கலாய்த்து விட்டது. பழைய ஹிந்தி படமான ‘கோல்மால்’ திரைப்படத்தில் வரும் வசனம்: “இது தான் பிச்சை கேட்கும் முறையா?” எனும் உரையுடன் ஒரு மீம் வெளியிடப்பட்டது.
இந்த மீமை இந்தியர்கள் ஆரவாரத்துடன் பகிர்ந்து ரசித்தனர். ஒருவர், “இப்போது நிதியை அவர் ஒருவர் தான் ஏற்பாடு செய்ய முடியும்!” எனக் கூறி ‘பிர் ஹெரா பேரி’ படத்தில் வரும் கதாநாயகியின் படத்தை பகிர்ந்துள்ளார்.
சொந்த நாட்டின் வளர்ச்சிக்காக, நாட்டின் உள் கட்டமைப்புக்காக, மக்களின் நலனுக்காக ஒரு முறை கூட பாகிஸ்தான் உலக நாடுகளிடம் நிதி கேட்கவில்லை, ஆனால் தீவிரவாதத்திற்கு உதவுவதற்காகவும், இந்தியாவுடன் போர் செய்வதற்காகவும் மட்டும் நிதி கேட்கிறது என்று பாகிஸ்தான் மக்களே தற்போது பாகிஸ்தான் அரசை கலாய்த்து வருகின்றனர்.
உலகில் உள்ள எல்லா நாடும் தங்களுடைய நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றுவதற்காக மட்டுமே நிதியை செலவழிப்பார்கள், ஆனால் பாகிஸ்தான் மட்டுமே நாட்டு மக்களை கண்டு கொள்ளாமல், தீவிரவாதிகளுக்கு செலவழித்து பக்கத்து நாட்டை இடைஞ்சல் செல்வதற்காகவே மொத்த நிதியையும் செலவு செய்கிறது என்று பல பாகிஸ்தானியர்கள் வருத்தத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.
பாகிஸ்தானை ஒரு நாடாகவே மதிக்காமல் இந்தியா முன்னேறி கொண்டே இருக்கிறது, ஆனால் இந்தியாவை அழிப்பதில் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் பாகிஸ்தான் பின்னடைவை தொடர்ந்து சந்தித்து வருகிறது என்றும் பலர் வருத்தத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.
பாகிஸ்தான் அரசியல்வாதிகள் அடுத்தடுத்து காமெடி செய்து வருவது அந்நாட்டு மக்களையே தற்போது வெறுப்படைய செய்துள்ளது என்பது சமூக வலைதளங்களின் பதிவுகளில் இருந்து தெரிய வருகிறது.