பெருமாள் கோவில்களில் தீர்த்தம் கொடுப்பது எதற்காகத் தெரியுமா? இதுதான் காரணமா?

பெருமாள் கோவிலுக்குச் சென்றால் அங்கு தீர்த்தம் கொடுப்பார்கள். இது எதற்கு தருகிறார்கள் என்று பலருக்கும் தெரியாது. வாங்கிக் குடித்து விட்டு கண்ணில் ஒற்றி, தலையில் தடவி விட்டுச் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால் இதன் உண்மையான…

பெருமாள் கோவிலுக்குச் சென்றால் அங்கு தீர்த்தம் கொடுப்பார்கள். இது எதற்கு தருகிறார்கள் என்று பலருக்கும் தெரியாது. வாங்கிக் குடித்து விட்டு கண்ணில் ஒற்றி, தலையில் தடவி விட்டுச் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால் இதன் உண்மையான தாத்பரியம் இதுதான். பெருமாள் கோவிலைப் பொருத்தவரையில் 3 முறையில் தீர்த்தம் வாங்க வேண்டும். இதைக் கேட்டும் வாங்கலாம்.

முதல் முறை தீர்த்தம் ப்ரதமம், காரீய சித்யர்த்தம் என்று பெயர். நம் செயல்களில் வெற்றி பெற வேண்டி இந்தத் தீர்த்தம் வழங்கப்படுகிறது. இரண்டாவது முறை தவிதீயம். தர்மஸ்தாபனம் என்கிறார்கள். நாம் வாழ்க்கையில் தர்மநெறிகளைக் கடைபிடித்து வாழ வேண்டும் என்பதற்காக வழங்கப்படுகிறது. மூன்றாம் முறை தீர்த்தத்தை சத்ரிதீயம் சமோஷ ப்ரோக்தம். அதாவது குணார்னவம் என்கிறார்கள்.

மெய்ப்பொருளான பகவானை உணர வேண்டும் என்பதற்காகவே இந்தத் தீர்த்தம் வழங்கப்படுகிறது. மூன்று முறையும் பருக வேண்டும். தலையில் தடவ கூடாது. கண்ணிலும் ஒத்திக் கொள்ளக் கூடாது. அங்கவஸ்திரத்திலோ அல்லது வேட்டி நுனியிலோ வாங்க வேண்டும். பெண்கள் புடவை தலைப்பில் வாங்க வேண்டும். கீழே சிந்தாமல் இருக்க வேண்டும். பருகியதும் ‘நாராயணா ‘என்று 3 முறை சொல்ல வேண்டும்.

கோவிலுக்குச் சென்றால் அங்கு போய் முறையாக எப்படி சாமி கும்பிடுவது, வலம் வருவது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பிரகாரம் சுற்றும்போது எதை எதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும். சாமி கும்பிட்டதும் என்ன செய்ய வேண்டும்? என நம் முன்னோர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு கோவிலிலும் ஒரு ஒழுக்க நெறிகள் இருக்கும். அதைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். பொதுவாக லுங்கி அணிந்து செல்லக்கூடாது. சில கோவில்களில் சூடம் ஏற்றக்கூடாது என்று ஒரு நியதி இருக்கும். அதைக் கடைபிடிக்க வேண்டும்.