கவுண்டமணி மனைவி மறைவு… விஜய், செந்தில் உள்பட நடிகர்கள் இரங்கல்

தமிழ்த்திரை உலகில் நடிகர் கவுண்டமணி தனக்கென ஒரு நகைச்சுவை பாணியைக் கொண்டு தனி சாம்ராஜ்யம் நடத்தினார். இவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட்தான். அதுவும் செந்திலுடன் இணைந்து விட்டால் கேட்கவே வேணாம். அவர் பெரும்பாலும்…

தமிழ்த்திரை உலகில் நடிகர் கவுண்டமணி தனக்கென ஒரு நகைச்சுவை பாணியைக் கொண்டு தனி சாம்ராஜ்யம் நடத்தினார். இவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட்தான். அதுவும் செந்திலுடன் இணைந்து விட்டால் கேட்கவே வேணாம். அவர் பெரும்பாலும் செந்திலை அடிப்பார். உதைப்பார். திட்டுவார். இப்படித்தான் காட்சிகள் இருக்கும். ஆனால் நாம் வயிறு குலுங்க சிரிப்போம்.

அந்த வகையில் கவுண்டமணி நகைச்சுவை நடிகராக, வில்லனாக, ஹீரோவாக என பன்முகத்திறனைக் காட்டியுள்ளார். கடைசியாக அவர் நடித்த படம் ஒத்த ஓட்டு முத்தையா. பெரிய அளவில் ரசிகர்களைக் கவரவில்லை. கவுண்டமணியைப் பொருத்தவரை யாருக்கும் பேட்டி கொடுப்பதில்லை.

இந்நிலையில் அவரது மனைவி சாந்தி (67) இன்று உடல்நிலைக் குறைவால் காலமானார். திரையுலகிற்கே பேரதிர்ச்சியாக உள்ளது. இந்த நிலையில், அண்ணனுக்கு எல்லாமே அவங்க தான் என்று நடிகர் நிழல்கள் ரவி தெரிவித்துள்ளார். மேலும் அவர் என்ன சொல்லி இருக்கிறார்னு பாருங்க.

இது ரொம்ப சோகமான ஒரு விஷயம். கவுண்டமணி அண்ணனை அவர் மனைவி தான் முழுமையாகப் பார்த்துக் கொண்டார். எல்லா விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து அண்ணனுக்கு உறுதுணையாக இருந்தார். கவுண்டமணி அண்ணனின் மனைவி சாந்திக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

கவுண்டமணியுடன் காமெடி நடிகராக நடித்த செந்தில் இந்த செய்தி கேள்விப்பட்டதும் முதல் ஆளாக வந்து கவுண்டமணியை சந்தித்து ஆறுதல் கூறினாராம். அதே போல கவுண்டமணியைக் கட்டித் தழுவி ஆறுதல் சொன்னாராம் விஜய்.

அன்னாரது உடல் தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.