காசிக்கு இணையாக தமிழகத்திலும் தலங்கள்… எந்தெந்த இடங்கள்னு தெரியுமா?

நம்மில் பலருக்கு விரும்பிய வாழ்க்கை,கல்வி,வசதி,புகழ் அமைந்திருக்கிறது இவையெல்லாம் அமையாமல் போனவைகளுக்குக் காரணம்  முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு பிதுர் தர்ப்பணம் ஆண்டுக்கு ஒருமுறை கூட செய்யாமல் இருப்பதுதான் காரணம். பிதுர் தர்ப்பணம் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை,புரட்டாசி…

நம்மில் பலருக்கு விரும்பிய வாழ்க்கை,கல்வி,வசதி,புகழ் அமைந்திருக்கிறது இவையெல்லாம் அமையாமல் போனவைகளுக்குக் காரணம்  முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு பிதுர் தர்ப்பணம் ஆண்டுக்கு ஒருமுறை கூட செய்யாமல் இருப்பதுதான் காரணம்.

பிதுர் தர்ப்பணம் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை என்று 3 அமாவாசைகளுக்கும் செய்து வர வேண்டும்;அல்லது புரட்டாசி அமாவாசைக்கு மட்டுமாவது செய்து வர வேண்டும்.

எல்லோருக்கும் அறிந்தவிதத்தில் காசியில் இருக்கும் கங்கைக்கரையில் 64 பைரவர்களின் சன்னதிகள் இருக்கின்றன;மகா வராகியின் சன்னதிகளும் காசியில் இருக்கும் கங்கைக்கரையில் இருக்கின்றன.

64 பைரவ சக்திகளுக்கு ஈடாக 64 வராகி சக்திகளின் பீடங்களும் இருக்கின்றன;பைரவ உபாசகர்களுக்கும்,வராகி உபாசகர்களுக்கும் தான் இந்த 64 பைரவ சன்னதிகளும்,64 வராகி பீடங்களும் தெரியும்;மற்றவர்களுக்கு ஆன்மீக சுற்றுலா மையங்களில் ஒன்று காசி

வறுமை,உடல் நலக்கோளாறு,உடல் ஊனம்,உறவுகள் மற்றும் சந்ததிகளின் ஆதரவு இல்லாதவர்கள் பலரால் காசிக்குச் சென்று முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்ய இயலாது; இதை போன யுகங்களில் யூகித்த ரிஷிகளும்,சித்தர்களும் காசிக்கு இணையான ஆலயங்களை நமது தமிழ்நாட்டில் ஈசனின் அருளால் நிறுவியுள்ளனர்.

சென்னைக்கு அருகில் இருக்கும் திருவள்ளூர், திப்பிராஜபுரம்(கும்பகோணம்) அருகில் இருக்கும் உள்ளிக்கடை, அறந்தாங்கி அருகில் இருக்கும் நெடுங்குடி, கும்பகோணம் அருகில் அமைந்திருக்கும் சேஷம்பாடி, புள்ளமங்கலம் அருள்மிகு விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் திருக்கோவில்.

மயிலாடுதுறை, திருவெண்காடு, திருவையாறு, ஸ்ரீவாஞ்சியம், சாயாவனம் இவ்விடங்களில் ஒவ்வொரு அமாவாசை அல்லது திதி நாட்களில் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்யலாம். கயா தலத்திற்கு ஈடாக இருக்கும் ஸ்தலங்கள்:ராமேஸ்வரம், குருவி ராமேஸ்வரம், காமேஸ்வரம், திருவாரூர் அருகில் இருக்கும் கேக்கரை, திருச்சி அருகில் இருக்கும் பூவாளூர்.