அர்ச்சனைத்தட்டுல வாழைப்பழம் தவறாமல் இடம்பெறுதே… ஏன்னு தெரியுமா?

நம்ம முன்னோர்கள் செய்ற ஒவ்வொரு செயலிலும் ஆழமான அர்த்தம் இருக்கும். அதனால்தான் கண்ணதாசனே அர்த்தமுள்ள இந்துமதம் என்ற தலைப்பில் புத்தகங்கள் எழுதினார். அந்த வகையில் அதன் அர்த்தம் என்னவா இருக்கும்னு பார்த்தா ஆச்சரியமா இருக்கும்.…

நம்ம முன்னோர்கள் செய்ற ஒவ்வொரு செயலிலும் ஆழமான அர்த்தம் இருக்கும். அதனால்தான் கண்ணதாசனே அர்த்தமுள்ள இந்துமதம் என்ற தலைப்பில் புத்தகங்கள் எழுதினார். அந்த வகையில் அதன் அர்த்தம் என்னவா இருக்கும்னு பார்த்தா ஆச்சரியமா இருக்கும். இதுல இவ்ளோ விஷயம் இருக்குதான்னு நாம பார்ப்போம்.

கோவிலுக்குப் போனா சாமி கும்பிடுவோம். பலர் அர்ச்சனை செய்வாங்க. அப்போ தேங்காய், பழம், சூடம், பத்தி, பன்னீர், வெத்தலைப்பாக்கு என எல்லாம் அர்ச்சனைத் தட்டுல இருக்கும். இவற்றில் தேங்காய், 2 வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு மிகவும் முக்கியம். எத்தனையோ பழங்கள் இருக்கும்போது இந்த வாழைப்பழம் வைக்கிறதுக்கு என்ன காரணம்னு பார்க்கலாமா…

வாழைப்பழத்துலதான் விதையே கிடையாது. அது கன்றின் மூலமா நாற்றின் மூலமா வரக்கூடியது. ஒரே ஒரு வாழை மரம் வச்சா அதுல சிம்பு வெடிச்சி அதுல இருந்து கன்று என பல வாழைமரங்கள் வளர்ந்து விடும். இப்படி பல சந்ததிகளைத் தானே உருவாக்கிக் கொள்ளும் சிறப்புத் தன்மை வாய்ந்தது வாழை மரம்.

இதை நம் பிறவியுடன் ஒப்பிட்டால் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறது. பிறவியே வேண்டாம். இந்தப் பிறவியோடு போதும்னு இறைவனின் சந்நதியில் வேண்டுதலை வைக்கிற போது இந்த வாழைப்பழத்தை சுவாமிக்காக நைவேத்தியம் பண்றோம்.

இந்த வாழைப்பழம் எப்படி விதையின்றி இருக்கிறதோ அதை சாப்பிட்டு விட்டுப் போட்டால் மீண்டும் எப்படி முளைக்காதோ அதே மாதிரி என்னுடைய வாழ்க்கையில மீண்டும் ஒரு பிறவியைக் கொடுக்காதே. இந்தப் பிறவியே போதும் என வேண்டுவதற்காகத்தான் இந்த வாழைப்பழம்.