வள்ளலார் இத்தனை பாவங்களையா சொன்னாரு? கவனம் மக்களே கவனம்..!

பாவம் செய்யாத மனிதர்களே இல்லைன்னு சொல்லலாம். ஏன்னா சின்ன எறும்பை நாம தெரியாம கால் பட்டு மிதிச்சி அது இறந்து போனா கூட பாவம்தான். பாவங்களின் 42 வகையை வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார்.வாங்க அவை…

பாவம் செய்யாத மனிதர்களே இல்லைன்னு சொல்லலாம். ஏன்னா சின்ன எறும்பை நாம தெரியாம கால் பட்டு மிதிச்சி அது இறந்து போனா கூட பாவம்தான். பாவங்களின் 42 வகையை வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார்.வாங்க அவை என்னென்னன்னு பார்க்கலாம்.

நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது. ஏழைகள் வயிறு எரியச்செய்வது. தருமம் பாராது தண்டிப்பது.

ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.பொருளை இச்சித்துப் பொய் சொல்வது. ஆசை காட்டி மோசம் செய்வது. பொது வழியை மூடி அடைப்பது. வேலை வாங்கிக்கொண்டு கூலி குறைப்பது. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது பெரும் பாவம்.

இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது. நட்டாற்றில் கை நழுவுவது கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது. கற்பிழந்தவளோடு கலந்துறைவது. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது. கருவைக் கலைப்பது. குருவை வணங்கக் கூசி நிற்பது பெரும் பாவமாகும்.

குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது. கற்றவர் தம்மிடம் கடுப்போடு நடப்பது. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது. ஊன் சுவை உண்டு உடல் வளர்ப்பது. கல்லும் நெல்லும் கலந்து விற்பது. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது பெரும் பாவம்.

பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது ஆலயக் கதவை அடைத்து வைப்பது. சிவனடியாரைச் சீறி வைவது. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது. சுத்த ஞானியரைத் தூஷணம் செய்வது. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடப்பது. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது பெரும் பாவம்.

மேற்கண்ட அனைத்து பாவங்களையும் விட நம்பியவர்களை நம்பிக்கை மோசம் செய்வதும் நம்பிக்கையான வார்த்தைகளை கொடுத்து அதை மீறுவதும் பாவங்களில் பெரும் பாவமாகும். பணத் துரோகம், இனத் துரோகம்
நம்பிக்கை துரோகம் செய்து யாரும் இன்பமாய் வாழ்ந்திட இயலாது.துன்பத்தில் பெரிய துன்பத்தை அனுபவித்தே ஆக வேண்டும். இதுதான் இறைநீதி