பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர் மற்றும் நடிகராவார். இவர் ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கியதன் மூலம் தனது சினிமாவில் தனது கேரியரை தொடங்கினார். அதற்கு பிறகு படத்தொகுப்பு உதவி இயக்குனர் என பல பணிகளை செய்து வந்தார்.
2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கினார் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு லவ் டுடே என்ற படத்தை இயக்கி அதன் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இந்த படமும் வெற்றி பெற்றது அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அடுத்ததாக டிராகன் திரைப்படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார் பிரதீப் ரங்கநாதன். அதை தொடர்ந்து நாயகனாக பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனை பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், ஏற்கனவே நேர்காணல்களில் பிரதிபரங்கநாதன் தற்போது படம் இயக்குவதில்லை நடிப்பில் தான் கவனம் செலுத்தப் போகிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட்க் காக பிரதீப் ரங்கநாதன் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இது ஒரு சூப்பர் ஹீரோ படம் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கிறாரா இல்லை வேறு யாரேனும் நடிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.