இந்தியா ஏற்கனவே பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வழியை தடை செய்ததோடு ஏப்ரல் 30 முதல் மே 23, 2025 வரை பாகிஸ்தானுடன் தொடர்புடைய எல்லா விமானங்களுக்கும் வான்வழி தடையை அறிவித்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் மற்றும் பிற விமானங்களும் இந்தியாவை தவிர்த்து சீனா மற்றும் தாய்லாந்து வழியாக தென்கிழக்கு ஆசியாவுக்கு சென்று வருகின்றன.
இந்த தடைகள் பாகிஸ்தானுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் உலகின் முன்னணி நாடுகளின் விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளி வழியாக செல்வதை தவிர்த்து, இந்தியா வழியாக செல்வதால், பாகிஸ்தானுக்கு பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் உலக நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.