இரவில் திடீரென போர் பயிற்சி நடத்திய இந்திய ராணுவம்.. இன்று பாகிஸ்தான் மீது தாக்குதல் ஆரம்பமா?

  இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழலில், பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் இராணுவ தளவாடத்தில் நேற்று இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை இந்திய ராணுவத்தின் Blackout பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி,…

war practice

 

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழலில், பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் இராணுவ தளவாடத்தில் நேற்று இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை இந்திய ராணுவத்தின் Blackout பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி, யுத்த சூழ்நிலை ஏற்பட்டால் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டது.

பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது, இந்தியாவையும் பாகிஸ்தானையும் மீண்டும் கடும் பதற்றத்திற்கு இட்டு சென்றது. இதையடுத்து பெரோஸ்பூர் பகுதியை மையமாக கொண்டு Blackout பயிற்சி நடைபெற்றது.

மேலும் பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என அந்த பகுதியில் அதிகாரிகள் ஒலிப்பெருக்கி மூலம் Blackout குறித்த அறிவிப்பை செய்தனர். பயிற்சி நேரத்தில் வீடுகளில் இன்வெர்டர்கள் மற்றும் ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

முழுமையான Blackout நேரத்தில், சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் தீப்ஷிகா ஷர்மாவின் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதியாக மேற்கொள்ளப்பட்டது. பெரோஸ்பூர், பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள முக்கிய ராணுவ பகுதியாக இருக்கின்றது என்பதால் இது மிக முக்கிய பயிற்சி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Blackout பயிற்சி நடைபெற்றுள்ளதால் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ராணுவ தளவாடங்கள் மிகுந்த தீவிரத்துடன் எதிர்வினை அளிக்க தயார் என பறைசாற்றுகின்றன. இருப்பினும், யுத்தம் தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.