தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் சற்றும் விறுவிறுப்பு குறையாமல் நாளுக்கு நாள் அனல் பறந்து கொண்டிருக்கிறது. புதிய அரசுக்கு சட்டமன்றத்தில் முழுமையான பெரும்பான்மை பலம் இல்லை என்றும், இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவை நம்பித்தான் இந்த அரசு காலம் தள்ள வேண்டும் என்றும் விமர்சித்த எதிர்த்தரப்பினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள் அரங்கேறி வருகின்றன. “யாருக்குடா அரசியல் தெரியாது, யாரை பார்த்து தற்குறி என்று சொன்னீர்கள்?” என தவெகவின் தீவிர தொண்டர்கள் தற்போது சமூக வலைத்தளங்களிலும் அரசியல் மேடைகளிலும் தங்களது அரசியல் சாணக்கியத்தனத்தை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அரசியல் விமர்சகர்கள் பலவீனமான அரசு என்று கணக்கு போட்டு கொண்டிருந்த வேளையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் கோட்டையில் முதல் கட்டமாக 3 விக்கெட்டுகள் மிக லாவகமாக வீழ்த்தப்பட்டுள்ளன. தாராபுரம், பெருந்துறை, மதுராந்தகம் ஆகிய தொகுதிகளின் அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ள நிகழ்வு வெறும் ஆரம்பம் தான் என்று தவெக தரப்பு கூறுகிறது. அதிமுகவில் இருந்து இன்னும் அடுத்த கட்டமாக 10 விக்கெட்டுகள், அதாவது 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை துறந்து தவெகவை நோக்கி வருவதற்கு பட்டியல் தயாராக உள்ளதாக கூறப்படும் தகவல் ஒட்டுமொத்த கோட்டை வட்டாரத்தையும் அதிர வைத்துள்ளது.
இந்த தொடர் ராஜினமாக்கள் காரணமாக அந்தந்த தொகுதிகளுக்கு விரைவில் வரவிருக்கும் இடைத்தேர்தல் களம் தான் தமிழக அரசியலின் அடுத்த மிகப்பெரிய திருப்புமுனையாக அமையப்போகிறது. தற்போது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் அனைவரும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வ ‘விசில்’ சின்னத்தில் மீண்டும் வேட்பாளர்களாக களம் இறங்குவது முற்றிலும் உறுதியாகிவிட்டது. ஆளுங்கட்சியின் அசுர பலம், மக்கள் செல்வாக்கு மற்றும் தேர்தல் உத்திகள் ஆகியவற்றின் துணையோடு இந்த இடைத்தேர்தல் களம் தவெகவிற்கு ஒரு மிகப்பெரிய சாதகமான அலையை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி, ராஜினாமா செய்த தொகுதிகளில் தவெகவின் வேட்பாளர்கள் மீண்டும் வெற்றி பெற்று வரும்போது, சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு தேவையான தனிப் பெரும்பான்மை பலம் தானாகவே கைக்கூடிவிடும். அதன் பிறகு, தவெக அரசு தனித்து இயங்குவதற்கும், எந்தவொரு சட்ட மசோதாவையும் யாருடைய தயவும் இன்றி நிறைவேற்றுவதற்கும் முழுமையான சுதந்திரம் கிடைத்துவிடும். இடைத்தேர்தலுக்கு பின் அமைய போகும் இந்த எண்சார்ந்த பலம், ஆளுங்கட்சியின் அதிகாரத்தை மாநில அளவில் மேலும் பலமடங்கு அதிகரிக்க செய்யும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
சட்டமன்றத்தில் தவெகவிற்குத் தனி பெரும்பான்மை பலம் வந்துவிட்டால், “உங்களுக்கு நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தருவதை மீண்டும் பரிசீலிப்போம், தற்காலிகமாக முட்டுக்கொடுப்போம்” என்று கூறி ஆளுங்கட்சியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைக்கும் எந்தவொரு கூட்டணிக் கட்சியும் இனி மிரட்டவோ அல்லது பயமுறுத்தவோ முடியாது. பிற கட்சிகளின் நிபந்தனைகளுக்கும், அழுத்தங்களுக்கும் அடிபணிய வேண்டிய அவசியம் முதலமைச்சர் விஜய்க்கு இல்லாமல் போய்விடும். தங்களை மிரட்டி பணிய வைக்க நினைத்த பழைய அரசியல் சக்திகளுக்கு முன்னால், தவெக தனது சுயபலத்தை நிரூபித்து நிமிர்ந்து நிற்கும் ஒரு கம்பீரமான சூழல் இதன் மூலம் உருவாகும்.
சுருக்கமாக சொன்னால், தேர்தல் முடிவுகளில் மக்கள் கொடுத்த சிறு இடைவெளியை தங்களது அரசியல் சாணக்கியத்தனத்தால் நிரப்பி, ஐந்து ஆண்டுகால தவெக ஆட்சியை இனி யாராலும் அசைக்க முடியாத ஒரு இரும்புக்கோட்டையாக மாற்றும் வேலைகள் கச்சிதமாக முடிந்துவிட்டன. டெல்லி அதிகாரமோ அல்லது உள்ளூர் அரசியல் சூழ்ச்சிகளோ இனி முதலமைச்சர் விஜய்யின் நாற்காலியை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியாது என்பதே தற்போதைய எதார்த்த நிலவரம். இந்த அதிரடி மாற்றங்களை சகித்து கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், தங்களது அரசியல் பலத்தை நிரூபிக்க வேண்டுமானால், தவெகவின் இந்த ஐந்து ஆண்டுகால வெற்றிகரமான ஆட்சி முடிந்து வரும் 2031 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வேண்டுமானால் நேருக்கு நேர் மோதிப் பார்க்கட்டும் சவால் விடுகிறார்கள் தவெக தொண்டர்கள்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
