இந்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ட்விட்டர் மூலம் உறுதி செய்துள்ளார்.
மேலும் பிரதமர் மோடி, இந்த ஆண்டில் இந்தியாவில் நடைபெறும் உச்சி மாநாட்டிற்கு புதினை வரவேற்கும் அழைப்பையும் வழங்கியுள்ளார். அதற்கு புதின் இந்தியா வருகை தர ஒப்புக்கொண்டார். புதினின் இந்திய வருகை குறித்த செய்தி பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரஞ்சு அதிபர் இம்மானுவேல் மாக்ரொன், இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி ஆகியோர் இந்தியாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.