ரஷ்யாவைச் சேர்ந்த இக்லா-எஸ் குறுகிய தூர விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ரூ.260 கோடி செலவில் அவசர கொள்முதல் திட்டத்தின் கீழ் அண்மையில் இந்திய எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது.
தோளில் வைத்தே இயக்கக்கூடிய இந்த ஏவுகணைகள், மிகக் குறுகிய நேரத்தில் எதிரியின் விமானங்களை வீழ்த்த முடியும். பாகிஸ்தானிடமிருந்து பல முறை அனுப்பப்பட்ட ட்ரோன்கள் போன்ற புதிய அச்சுறுத்தல்களுக்கு இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இக்லா-எஸ் ஏவுகணைகள் jammers, spoofers, laser systems உடன் இணைந்து செயல்படுகிறது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில், இதை பயன்படுத்தி பாகிஸ்தான் ட்ரோன் ஒன்றை இந்திய இராணுவம் துல்லியமாக அழித்தது.
இந்த ஏவுகணைகளால் விமானப்படைக்கு காத்திருக்காமல், உடனடியாக பதிலடி கொடுக்க முடியும். இது எதிரிகளை தடுக்கும் மற்றும் பதிலடி கொடுக்கும் இரண்டு முகதன்மையும் கொண்டது.
ராணுவம் தற்போது 48 கூடுதல் இக்லா-எஸ் ஏவுதளங்கள் மற்றும் 90 ஏவுகணைகள் வாங்க விரைவான ஒப்பந்தத்தைத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து நிலவும் தீவிர சூழ்நிலையில், இக்லா-எஸ் ஏவுகணைகள் இந்தியாவின் பாதுகாப்பு ரீதியான உறுதியை வெளிப்படுத்துகிறது. இ
இந்த பாதுகாப்பு வலுப்படுத்தல், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் இந்தியாவின் திட்டமிடலின் ஒரு பகுதியாகும். எதிரி ட்ரோன்கள், விமானங்கள் இந்திய எல்லையில் நுழைய முயன்றால், இவை உடனடியாக பதிலடி கொடுக்கும்.