இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒரு புள்ளி தான் நாம். மனித ஆற்றலும் கூட பிரபஞ்சத்தில் இருந்தே வருவதால் அந்த மகத்தான தன்மையைக் கொண்டே இருக்கும். ஆனால் நாம் அதை உணராமல் குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்து வருகிறோம். நான் பெரியவன். நீ பெரியவன் என்ற பேதம் வருகிறது. அங்கு வேற்றுமை வளர்ந்து கலவரம் வெடிக்கிறது.
இதில் இருந்து மீள நமது சக்தியை நாம் உணர வேண்டும். உதாரணத்துக்கு நாம் பாலின் பல்வேறு படிநிலைகளைப் பார்க்கலாம். பாலுக்கு கஷ்டம் கொடுத்தால் தயிராகிறது. தயிருக்கு கஷ்டம் கொடுத்தால் மோர் ஆகிறது. அதில் இருந்து கொஞ்சம் கஷ்டப்பட்டு வெண்ணை ஆகிறது.
வெண்ணையைக் கொடுமை செய்தால் நெய் ஆகிறது. பாலை விட தயிர் உயர்ந்தது. அதை விட வெண்ணை உயர்ந்தது. வெண்ணையை விட நெய் உயர்ந்தது. இதில் அர்த்தம் என்னவென்றால் அடிக்கடி கஷ்டம்இ சங்கடங்கள் சந்தாலும் கூட மனிதனின் நிறம் மாறாமல் இருக்கிறதோ சமூகத்தில் அவனுடைய மதிப்பும் அதிகரிக்கிறது.
பாலை எடுத்துக்கொண்டால் அதை ஒருநாளைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதன்பிறகு கெட்டுவிடும். ஆனால் நெய் ஒருபோதும் கெட்டுப்போகாது. அதுபோலத்தான் உங்கள் சிந்தனையும் உள்ளது. அதை நேர்மறை எண்ணங்களால் நிரப்பும்போது அளவற்ற சக்தி கிடைக்கிறது.
அந்த மனம் எவ்வளவு நாள்கள் ஆனாலும் கெடாமல் தங்கம் போல தகதகவென ஜொலிக்கிறது. அப்போது நீங்கள் தோல்வியே காணாத மனிதன் ஆகி விடுவீர்கள். இந்தப் பிரபஞ்சமும் கூட உங்களுடனே பயணிக்கும்.