இப்போது, பாகிஸ்தானில் இருந்து மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால், இந்தியா அதை ஒரு போராகவே பார்க்கும். அதாவது, இந்தியா இனிமேல் பயங்கரவாத தாக்குதல்களுக்கு நேரடியாக ராணுவ பதில் தரும் என்று சொல்கிறது.
இந்த கடுமையான எச்சரிக்கை, இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு கொள்கையில் பெரிய மாற்றத்தை காட்டுகிறது. எந்த பகுதிக்குள்ளும் தாக்குதல் நடந்தாலும், இந்தியா பதிலடி கொடுக்கும் என்று டெல்லி அரசு தெளிவாக கூறியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோவை பாஜக சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. அதில், “பயப்பட தேவையில்லை. இப்போது செயல் செய்யும் நேரம்! பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க நேரம் வந்துவிட்டது” என்று பதிவிட்டுள்ளனர்.
இதே நேரத்தில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார், “இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாமும் நிறுத்தலாம்” என்றும், எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், இந்திய உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாவது: பாகிஸ்தான் வெளியில் அமைதியாக பேசினாலும், உள்நாட்டில் பயங்கரவாத குழுக்களுக்கு வழிகாட்டியாக, காஷ்மீரில் புதிய தாக்குதல்களை நடத்த தூண்டுகிறது. பாதுகாப்புப் படைகள் கவனம் விலகும் வகையில் தற்கொலைப்படை தாக்குதல்கள் திட்டமிடப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே கடந்த அரசுகள் செய்தது போல் இனிமேல் அமைதி பேச்சுவார்த்தை என்பதெல்லாம் இல்லை, தீவிரவாதிகள் தாக்கினால் பதிலுக்கு ராணுவ தாக்குதல் தான், உலக நாடுகளின் அழுத்தத்திற்கு பயப்பட போவதில்லை என்ற கொள்கை முடிவை இந்தியா எடுத்துள்ளதாக கணிக்கப்படுகிறது.
https://x.com/BJP4India/status/1921045028190797985