பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி.. இந்தியா பயன்படுத்த போகும் அதிவேக ஏவுகணை பிரம்மோஸ்-என்ஜி..!

  இந்தியாவின் வான்வழி பாதுகாப்பு சக்தி விரைவில் எதிரிகளை தாண்டி புதிய உயரத்தை எட்டவுள்ளது. இந்திய விமானப்படை மற்றும் கடற்படை, ரபாயல் போர் விமானங்களில் பிரம்மோஸ்-என்ஜி (BrahMos-NG) எனப்படும் அடுத்த தலைமுறை அதிவேக ஏவுகணையை…

bromos ng

 

இந்தியாவின் வான்வழி பாதுகாப்பு சக்தி விரைவில் எதிரிகளை தாண்டி புதிய உயரத்தை எட்டவுள்ளது. இந்திய விமானப்படை மற்றும் கடற்படை, ரபாயல் போர் விமானங்களில் பிரம்மோஸ்-என்ஜி (BrahMos-NG) எனப்படும் அடுத்த தலைமுறை அதிவேக ஏவுகணையை நிறுவத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த ஏவுகணை 290 கிமீ தொலைவு வரை பாயும் திறன் மற்றும் மணிக்கு 4170 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இது எதிரியின் இலக்குகளை மிக துல்லியமாக தாக்கும் திறன் பெற்றது.

ஏற்கனவே இந்தியாவின் ரபாயல் விமானப் படை குறித்து பாகிஸ்தான் கவலையுடன் இருக்கிறது. இப்போது அந்த விமானங்களில் பிரம்மோஸ் என்ஜி போன்ற பிரபலமான அழிக்கும் ஆயுதங்கள் இணைக்கப்படுவதால், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு முற்றிலும் ஒழிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அபூர்வ ஏவுகணை இணைவால், எதிரிகள் இந்தியா மீது மேற்கொள்ளும் ஏரியல் தாக்குதல்களுக்கு மிக விரைவாகவும், துல்லியமாகவும் பதிலடி அளிக்க முடியும்.

பாகிஸ்தானின் JF-17 விமானத்துடன் ஒப்பிடும் போது, ரபாயல் ஏற்கனவே பலமடங்கு மேம்பட்டது. இப்போது பிரம்மோஸ்-என்ஜி இணைவால் இது ஒரு அதிவேக தாக்குதல் அமைப்பாக மாறுகிறது.

இந்த ஏவுகணையின் முதல் சோதனை விரைவில் நடைபெறவுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவில் வடிவமைக்கப்படும் இது இந்தியாவின் சுய நம்பிக்கைக்கான புதிய முன்னேற்றம் ஆகும்.